search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறுமிகள் தப்பி ஓட்டம்
    X

    கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறுமிகள் தப்பி ஓட்டம்

    கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 சிறுமிகள் தப்பி சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய 3 சிறுமிகளையும் தேடி வருகிறார்கள்.
    வில்லிவாக்கம்:

    புரசைவாக்கத்தில் கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு 18 வயதுக்கு குறைவாக குற்றம் செய்த சிறுவர்-சிறுமிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த பள்ளியில் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்ட 50 சிறுவர்களும், 3 சிறுமிகளும் அடைக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலையில் 3 சிறுமிகளும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சுற்று சுவரில் ஏறி வெளியே குதித்து ஓட்டேரி சுடுகாடு வழியாக தப்பி சென்றனர். நேற்று மாலையில் 3 சிறுமிகளையும் சீர்திருத்த பள்ளி கண்காணிப்பாளர் செல்வராஜ் தேடிய போது அவர்கள் தப்பி சென்றது தெரிய வந்தது. தப்பிய 3 சிறுமிகளும் திருட்டு வழக்கில் கைதானார்கள்.

    இதுகுறித்து செகரட்டியேட் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய 3 சிறுமிகளையும் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×