என் மலர்
செய்திகள்

பவானி அருகே நள்ளிரவில் கர்நாடகா லாரி தீ வைத்து எரிப்பு: மர்ம கும்பல் தப்பி ஓட்டம்
பவானி அருகே நள்ளிரவில் கர்நாடகா லாரி தீ வைத்து எரித்த ஒரு மர்ம கும்பல் தப்பி ஓடியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
கோவையிலிருந்து ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு லாரி பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த லாரி நள்ளிரவில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோடு-கவுந்தப்பாடி ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
லாரியை மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றார். அருகில் மாற்று டிரைவர் சங்கர் (37) இருந்தார்.
சந்தை மேட்டு பகுதியில் லாரி சென்ற போது திடீரென ஒரு கும்பல் அங்கு வந்து லாரியை நிறுத்தியது.
பிறகு லாரியில் தீ வைத்து விட்டு இருளில் அந்த கும்பல் தப்பி விட்டது. இதில் லாரி குபு..குபு.. வென தீ பிடித்து எரிந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும். பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சித்தோடு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். லாரியில் உள்ள ஜவுளி பொருட்கள் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். தக்க சமயத்தில் தீ அணைக்கப்பட்டதால் லாரி முழுவதும் எரியாமல் தப்பியது.
மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகி ராமனும் சம்பவ இடத்துக்கு வந்து எரிக்கப்பட்ட லாரியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். லாரிக்கு தீ வைத்து தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவையிலிருந்து ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு லாரி பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த லாரி நள்ளிரவில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே சித்தோடு-கவுந்தப்பாடி ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
லாரியை மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றார். அருகில் மாற்று டிரைவர் சங்கர் (37) இருந்தார்.
சந்தை மேட்டு பகுதியில் லாரி சென்ற போது திடீரென ஒரு கும்பல் அங்கு வந்து லாரியை நிறுத்தியது.
பிறகு லாரியில் தீ வைத்து விட்டு இருளில் அந்த கும்பல் தப்பி விட்டது. இதில் லாரி குபு..குபு.. வென தீ பிடித்து எரிந்தது.
இது பற்றி தகவல் கிடைத்ததும். பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சித்தோடு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். லாரியில் உள்ள ஜவுளி பொருட்கள் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். தக்க சமயத்தில் தீ அணைக்கப்பட்டதால் லாரி முழுவதும் எரியாமல் தப்பியது.
மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகி ராமனும் சம்பவ இடத்துக்கு வந்து எரிக்கப்பட்ட லாரியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். லாரிக்கு தீ வைத்து தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story






