என் மலர்
செய்திகள்

நெய்வேலியில் கன்னடர் சங்கத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்களிடையே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் நெய்வேலியில் உள்ள கன்னடர் சங்க அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே நெய்வேலி கன்னடர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் நெய்வேலி என்.எல்.சி.யில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதைத் தொடர்ந்து தமிழகத்தில் கர்நாடக பதிவு எண் கொண்ட லாரிகள், பஸ்கள் தாக்கப்பட்டு வருகின்றன.
இதைதொடர்ந்து நெய்வேலியில் உள்ள கன்னடர் சங்க அலுவலகமும் தாக்கப்படலாம் என்று அதன் நிர்வாகிகள் கருதினர். இதையொட்டி கன்னடர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நெய்வேலியில் உள்ள கன்னடர் சங்க அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
துணைபோலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் 500 போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே நெய்வேலி கன்னடர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் நெய்வேலி என்.எல்.சி.யில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதைத் தொடர்ந்து தமிழகத்தில் கர்நாடக பதிவு எண் கொண்ட லாரிகள், பஸ்கள் தாக்கப்பட்டு வருகின்றன.
இதைதொடர்ந்து நெய்வேலியில் உள்ள கன்னடர் சங்க அலுவலகமும் தாக்கப்படலாம் என்று அதன் நிர்வாகிகள் கருதினர். இதையொட்டி கன்னடர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நெய்வேலியில் உள்ள கன்னடர் சங்க அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
துணைபோலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் 500 போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story






