என் மலர்
செய்திகள்

எண்ணூர் அனல்மின் நிலைய பகுதியில் சிறுத்தை நடமாட்டம்?: வனத்துறையினர் தேடுதல் வேட்டை
எண்ணூர் அனல் மின் நிலைய பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
ஆலந்தூர்:
எண்ணூர் அனல்மின் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை போன்ற விலங்கு சுற்றி திரிந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து சிறுத்தை புலி என்று அச்சம் அடைந்தனர்.
அதே விலங்கை அனல்மின் நிலைய பாதுகாவலர் ஒருவரும், மின்சார ரெயில் டிரைவர் ஒருவரும் பார்த்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து அவர்கள் திருவொற்றியூர் போலீசுக்கு தெரிவித்தனர். அவர்கள் கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
கடந்த 2 நாட்களாக கிண்டி வனத்துறையினர் சிறுத்தை புலியை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் சிக்கவில்லை.
இதுகுறித்து கிண்டி வனத்துறை அதகாரி ஒருவர் கூறும் போது, எண்ணூர் அனல் மின் நிலைய பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை புலி எதுவும் சிக்கவில்லை.
இங்கு சிறுத்தை புலி வருவதற்கான வாய்ப்பு குறைவு. காட்டுப்பூனையை பொதுமக்கள் பார்த்து இருக்கலாம்.
காட்டுப்பூனை சுமார் 3 அடி முதல் 11 அடி நீலம் வரை வளரும். மற்ற விலங்குகள் எதுவும் தாக்கப்படாததால் சிறுத்தை புலி நடமாட்டம் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
எண்ணூர் அனல்மின் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை போன்ற விலங்கு சுற்றி திரிந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து சிறுத்தை புலி என்று அச்சம் அடைந்தனர்.
அதே விலங்கை அனல்மின் நிலைய பாதுகாவலர் ஒருவரும், மின்சார ரெயில் டிரைவர் ஒருவரும் பார்த்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து அவர்கள் திருவொற்றியூர் போலீசுக்கு தெரிவித்தனர். அவர்கள் கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
கடந்த 2 நாட்களாக கிண்டி வனத்துறையினர் சிறுத்தை புலியை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் சிக்கவில்லை.
இதுகுறித்து கிண்டி வனத்துறை அதகாரி ஒருவர் கூறும் போது, எண்ணூர் அனல் மின் நிலைய பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை புலி எதுவும் சிக்கவில்லை.
இங்கு சிறுத்தை புலி வருவதற்கான வாய்ப்பு குறைவு. காட்டுப்பூனையை பொதுமக்கள் பார்த்து இருக்கலாம்.
காட்டுப்பூனை சுமார் 3 அடி முதல் 11 அடி நீலம் வரை வளரும். மற்ற விலங்குகள் எதுவும் தாக்கப்படாததால் சிறுத்தை புலி நடமாட்டம் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
Next Story






