என் மலர்
செய்திகள்

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
நெய்வேலி சுரங்க விரிவாக்க பணிக்கு மாற்றுச்சாலை அமைத்ததை எதிர்த்து பொதுமக்கள்-மாணவர்கள் மறியல்
நெய்வேலி சுரங்க விரிவாக்க பணிக்கு மாற்றுச்சாலை அமைத்ததை எதிர்த்து பொதுமக்கள்-மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 3 சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. சுரங்க விரிவாக்க பணிக்காக நெய்வேலி- மந்தாரக்குப்பம் செல்லும் பகுதியில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
நெய்வேலிக்கும்- மந்தாரக்குப்பத்துக்கும் இடையே தாண்டவன்குப்பம் பகுதி உள்ளது. என்.எல்.சி.யில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு வசித்து வருகிறார்கள்.
சுரங்க விரிவாக்கப் பணிக்காக இந்த பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுக்கு முன்பு என்.எல்.சி. சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த பகுதி மக்கள் வெளியேறவில்லை. அங்கேயே தொடர்ந்து வசித்து வந்தனர். நாங்கள் நீண்ட நாட்களாக இங்கு வசித்து வருகிறோம். இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் சுரங்க விரிவாக்க பணிக்காக தாண்டவன்குப்பம் பகுதி மக்கள் முழுமையாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று என்.எல்.சி. சார்பில் நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
மேலும் நெய்வேலி டவுன்ஷிப் தெர்மல் குடை பகுதியில் இருந்து மந்தாரக்குப்பம் வரை சாலை துண்டிக்கப்படும். மாற்றுப்பாதை வழியாக மக்கள் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை அந்த சாலை துண்டிக்கப்பட்டது. மாற்று வழியாக செல்லவும் என்று அறிவிப்பு போர்டுகள் அந்த பகுதியில் வைக்கப்பட்டது.
இதனால் தனியார் மற்றும் அரசு பஸ்கள், வாகனங்கள் 29-வது வட்ட மேலாண்மை அலுவலகம் வழியாக மாற்றுப்பாதையில் சென்றன. சாலை துண்டிக்கப்பட்டதால் தாண்டவன்குப்பம் பகுதி மக்கள், பள்ளி செல்லும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மாற்று வழி அமைக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். தாண்டவன்குப்பம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆண்-பெண்கள் மற்றும் மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மாற்று வழியாக செல்லவும் என்று வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பலகையையும் உடைத்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், புகழேந்தி, தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
மாற்றுப்பாதை வழியாக செல்ல வற்புறுத்தக்கூடாது மாற்றுப்பாதை வழியாக செல்வதால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியது உள்ளது என்று தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 3 சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. சுரங்க விரிவாக்க பணிக்காக நெய்வேலி- மந்தாரக்குப்பம் செல்லும் பகுதியில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.
நெய்வேலிக்கும்- மந்தாரக்குப்பத்துக்கும் இடையே தாண்டவன்குப்பம் பகுதி உள்ளது. என்.எல்.சி.யில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு வசித்து வருகிறார்கள்.
சுரங்க விரிவாக்கப் பணிக்காக இந்த பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுக்கு முன்பு என்.எல்.சி. சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த பகுதி மக்கள் வெளியேறவில்லை. அங்கேயே தொடர்ந்து வசித்து வந்தனர். நாங்கள் நீண்ட நாட்களாக இங்கு வசித்து வருகிறோம். இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் சுரங்க விரிவாக்க பணிக்காக தாண்டவன்குப்பம் பகுதி மக்கள் முழுமையாக இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று என்.எல்.சி. சார்பில் நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
மேலும் நெய்வேலி டவுன்ஷிப் தெர்மல் குடை பகுதியில் இருந்து மந்தாரக்குப்பம் வரை சாலை துண்டிக்கப்படும். மாற்றுப்பாதை வழியாக மக்கள் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை அந்த சாலை துண்டிக்கப்பட்டது. மாற்று வழியாக செல்லவும் என்று அறிவிப்பு போர்டுகள் அந்த பகுதியில் வைக்கப்பட்டது.
இதனால் தனியார் மற்றும் அரசு பஸ்கள், வாகனங்கள் 29-வது வட்ட மேலாண்மை அலுவலகம் வழியாக மாற்றுப்பாதையில் சென்றன. சாலை துண்டிக்கப்பட்டதால் தாண்டவன்குப்பம் பகுதி மக்கள், பள்ளி செல்லும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மாற்று வழி அமைக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். தாண்டவன்குப்பம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஆண்-பெண்கள் மற்றும் மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மாற்று வழியாக செல்லவும் என்று வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு பலகையையும் உடைத்தனர்.
தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், புகழேந்தி, தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
மாற்றுப்பாதை வழியாக செல்ல வற்புறுத்தக்கூடாது மாற்றுப்பாதை வழியாக செல்வதால் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியது உள்ளது என்று தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story






