என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிகள் இடையேயான மாநில கிரிக்கெட்: கோத்தகிரி பள்ளி அணி சாம்பியன்
Byமாலை மலர்7 Sep 2016 11:22 AM GMT (Updated: 7 Sep 2016 11:23 AM GMT)
பள்ளிகள் இடையேயான மாநில கிரிக்கெட் போட்டியில் கோத்தகிரி பள்ளி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
ஈரோடு:
தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள ஐ.சி.எஸ்-ஐ.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையே ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2016-17ம் கல்வி ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டியை நிரந்தர அங்கீகாரம் பெற்ற பெருந்துறை தி யுனிக் அகாடமி பள்ளி எடுத்து நடத்தியது.
மொத்தம் 2 நாட்கள் நடந்த இந்த போட்டி தி யுனிக் அகாடமி பள்ளி மைதானத்திலும் மற்றும் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மைதானத்திலும் விறுவிறுப்பாக நடந்தது.
மொத்தம் 14 பள்ளிகள் கலந்து கொண்டன. நாக்-அவுட் முறையிலும் பி.சி.சி.ஐ-ன் விதிமுறைகளை கடைபிடித்தும் இப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியை ஏ.எஸ். ஐ.எஸ்.சி.தமிழ்நாடு என்ற அமைப்பின் தலைவர் டாக்டர் சார்லஸ் தொடங்கி வைத்தார்.
இதன் இறுதி போட்டியில் கோத்தகிரி ரிவர் சைடு பப்ளிக் பள்ளி அணியும், சென்னை சிஷ்யா பள்ளி அணியும் மோதின. டாஸ் வென்ற கோத்தகிரி அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தனர். அந்த அணி வீரர் ரோஹித் ராம் 94 ரன்கள் எடுத்தார். ராம் நிகேஷ் 36 ரன்னும், ராம் நரேஷ் 27 ரன்னும் எடுத்தனர்.
200 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு களம் இறங்கிய சென்னை அணி 9.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 48 ரன்களுடன் சுருண்டது. கோத்தகிரி பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
கோத்தகிரி அணி வீரர் நிகேஷ் 4 விக்கெட்டையும் ரோஹித் ராம் 3 விக்கெட்டையும் சாய்த்தனர். தொடர் நாயகனாக ரோஹித் ராம் தேர்வு செய்யப்பட்டார். இளம் விளையாட்டு வீரராக கோவை வீரர் சச்சின் விநாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த பேட்ஸ்மேனாக கோத்தகிரி வீரர் ராம் நரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
முதல் மற்றும் 2-ம் பரிசு பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவற்றை பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.குப்புசாமி வழங்கி பாராட்டினார்.
பரிசளிப்பு விழாவில் தி யுனிக் அகாடமி பள்ளி தலைவர் இளங்கோ, பள்ளி முதல்வர் உமயவள்ளி இளங்கோ பள்ளியின் நிர்வாக இயக்குனரும் தமிழக கிரிக்கெட் அணி வீரருமான அஸ்வின் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு வாழ்த்து கூறினர். முடிவில் பள்ளி மாணவி ஸ்ரீ நிதி நன்றி கூறினார்.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள ஐ.சி.எஸ்-ஐ.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையே ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2016-17ம் கல்வி ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டியை நிரந்தர அங்கீகாரம் பெற்ற பெருந்துறை தி யுனிக் அகாடமி பள்ளி எடுத்து நடத்தியது.
மொத்தம் 2 நாட்கள் நடந்த இந்த போட்டி தி யுனிக் அகாடமி பள்ளி மைதானத்திலும் மற்றும் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மைதானத்திலும் விறுவிறுப்பாக நடந்தது.
மொத்தம் 14 பள்ளிகள் கலந்து கொண்டன. நாக்-அவுட் முறையிலும் பி.சி.சி.ஐ-ன் விதிமுறைகளை கடைபிடித்தும் இப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியை ஏ.எஸ். ஐ.எஸ்.சி.தமிழ்நாடு என்ற அமைப்பின் தலைவர் டாக்டர் சார்லஸ் தொடங்கி வைத்தார்.
இதன் இறுதி போட்டியில் கோத்தகிரி ரிவர் சைடு பப்ளிக் பள்ளி அணியும், சென்னை சிஷ்யா பள்ளி அணியும் மோதின. டாஸ் வென்ற கோத்தகிரி அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தனர். அந்த அணி வீரர் ரோஹித் ராம் 94 ரன்கள் எடுத்தார். ராம் நிகேஷ் 36 ரன்னும், ராம் நரேஷ் 27 ரன்னும் எடுத்தனர்.
200 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு களம் இறங்கிய சென்னை அணி 9.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 48 ரன்களுடன் சுருண்டது. கோத்தகிரி பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
கோத்தகிரி அணி வீரர் நிகேஷ் 4 விக்கெட்டையும் ரோஹித் ராம் 3 விக்கெட்டையும் சாய்த்தனர். தொடர் நாயகனாக ரோஹித் ராம் தேர்வு செய்யப்பட்டார். இளம் விளையாட்டு வீரராக கோவை வீரர் சச்சின் விநாயக் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த பேட்ஸ்மேனாக கோத்தகிரி வீரர் ராம் நரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
முதல் மற்றும் 2-ம் பரிசு பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவற்றை பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.குப்புசாமி வழங்கி பாராட்டினார்.
பரிசளிப்பு விழாவில் தி யுனிக் அகாடமி பள்ளி தலைவர் இளங்கோ, பள்ளி முதல்வர் உமயவள்ளி இளங்கோ பள்ளியின் நிர்வாக இயக்குனரும் தமிழக கிரிக்கெட் அணி வீரருமான அஸ்வின் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு வாழ்த்து கூறினர். முடிவில் பள்ளி மாணவி ஸ்ரீ நிதி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X