என் மலர்
செய்திகள்

வேளாங்கண்ணி திருவிழா: நாகை மாவட்டத்தில் நாளை விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று பெரிய தேர் பவனியும், நாளை (வியாழக்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழாவும் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நாளை நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாகை மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Next Story






