என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டு தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் - இந்து மக்கள் கட்சி தலைவர் பேட்டி
    X

    கோர்ட்டு தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் - இந்து மக்கள் கட்சி தலைவர் பேட்டி

    கோர்ட்டு தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பெண்களை இழிவுபடுத்தும் வகையில்- கொங்கு மண்டல கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழங்கப்பட்ட சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

    அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு போதிய நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் அதை உடனே நிறைவேற்ற வேண்டும். நாட்டு இன மாடுகள் மற்றும் காங்கயம் இன மாடுகள் அடுமாட்டுக்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. எனவே பாரம்பரிய மாடுகளை காப்பாற்றுவதற்காக ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லை என்றால் கோர்ட்டு தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம். நீர்நிலைகளை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டும். ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது பற்றி விவாதிக்க நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை பெருந்துறையில் இந்து மக்கள் கட்சி மற்றும் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கருத்தரங்கு பேரணி- பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் குமார ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.
    Next Story
    ×