என் மலர்
செய்திகள்

விருத்தாசலத்தில் காதலிக்க மறுத்த நர்சை கொல்ல முயன்ற வாலிபர் கைது
விருத்தாசலத்திலும் காதலிக்க மறுத்த நர்சை வாலிபர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்:
விழுப்புரத்தில் மாணவி நவீனா ஒருதலைகாதல் விவகாரத்தில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். அந்த சோகச்சுவடுகள் நீங்கும் முன்பு விருத்தாசலத்திலும் காதலிக்க மறுத்த நர்சை வாலிபர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் ஏனாதிமேட்டைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகள் புஷ்பலதா (வயது 21). விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் புஷ்பலதா நர்சாக பணியாற்றி வருகிறார். தினமும் ஆஸ்பத்திரிக்கு சைக்கிளில் சென்று வருவார்.
சம்பவத்தன்று இரவு பணியை முடித்து விட்டு சைக்கிளில் புஷ்பலதா வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பூதாமூர் பழைய காலனி பகுதியில் வந்த போது அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (22) என்பவர் அங்கு வந்தார். புஷ்பலதாவை வழிமறித்த அவர் கேலி, கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த புஷ்பலதா வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புஷ்பலதாவின் உறவினர்கள் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, தனசேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பின்னர் போலீசார் பிரச்சனை குறித்து புஷ்பலதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனசேகர், புஷ்பலதாவை ஒரு தலையாக காதலிப்பதும், புஷ்பலதா மறுத்ததால் அவரை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இது குறித்து புஷ்பலதாவின் அக்கா கமலா கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனசேகர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து, கடலூர் போலீசார் தனசேகரை விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தனசேகரை விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.
விழுப்புரத்தில் மாணவி நவீனா ஒருதலைகாதல் விவகாரத்தில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். அந்த சோகச்சுவடுகள் நீங்கும் முன்பு விருத்தாசலத்திலும் காதலிக்க மறுத்த நர்சை வாலிபர் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் ஏனாதிமேட்டைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மகள் புஷ்பலதா (வயது 21). விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் புஷ்பலதா நர்சாக பணியாற்றி வருகிறார். தினமும் ஆஸ்பத்திரிக்கு சைக்கிளில் சென்று வருவார்.
சம்பவத்தன்று இரவு பணியை முடித்து விட்டு சைக்கிளில் புஷ்பலதா வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பூதாமூர் பழைய காலனி பகுதியில் வந்த போது அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (22) என்பவர் அங்கு வந்தார். புஷ்பலதாவை வழிமறித்த அவர் கேலி, கிண்டல் செய்து தகராறில் ஈடுபட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த புஷ்பலதா வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புஷ்பலதாவின் உறவினர்கள் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, தனசேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பின்னர் போலீசார் பிரச்சனை குறித்து புஷ்பலதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனசேகர், புஷ்பலதாவை ஒரு தலையாக காதலிப்பதும், புஷ்பலதா மறுத்ததால் அவரை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இது குறித்து புஷ்பலதாவின் அக்கா கமலா கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனசேகர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து, கடலூர் போலீசார் தனசேகரை விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் தனசேகரை விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story






