என் மலர்
செய்திகள்

கடம்பூர் அருகே கஞ்சா செடி பயிரிட்டதாக தந்தை -மகன் உள்பட 4 பேர் கைது
கடம்பூர் அருகே கஞ்சா செடி பயிரிட்டதாக தந்தை-மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
கடம்பூர் மலைப்பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி பங்களா புதூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மேற்பார்வையில் கடம்பூர் அருகே உள்ள உகினியம் பகுதியில் கடம்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உகினியம் பொள்ளாக்காடு என்ற இடத்தில் ஒருதோட்டத்தில் குச்சி கிழங்கு செடிகளுக்கு இடையே கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. மொத்தம் 60 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
இந்த கஞ்சா செடிகளை பயிரிட்டதாக ரங்கசாமி (வயது 63), இவரது மகன் பத்திரன் (28) மற்றும் மாது, நஞ்சுண்டன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேரையும் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடம்பூர் மலைப்பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி பங்களா புதூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மேற்பார்வையில் கடம்பூர் அருகே உள்ள உகினியம் பகுதியில் கடம்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உகினியம் பொள்ளாக்காடு என்ற இடத்தில் ஒருதோட்டத்தில் குச்சி கிழங்கு செடிகளுக்கு இடையே கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. மொத்தம் 60 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
இந்த கஞ்சா செடிகளை பயிரிட்டதாக ரங்கசாமி (வயது 63), இவரது மகன் பத்திரன் (28) மற்றும் மாது, நஞ்சுண்டன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேரையும் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story






