என் மலர்
செய்திகள்

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை: இடி தாக்கியதில் மாணவி காயம்
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இடி தாக்கியதில் மாணவி காயம் அடைந்தார்.
கடலூர்:
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. காதை செவிடாக்கும் சத்தத்துடன் பலத்த இடி-மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பத்தில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. தென்னை மரத்தின் அருகே வீட்டில் படித்துக் கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவி பராசக்தி(வயது 13)க்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுக்றிது
கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் உள்பட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பண்ருட்டியில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழை காரணமாக திருப்பாதிரி புலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்குள் மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று பிரதோச விழாவுக்கு வந்த பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை 3 மணிவரை பெய்து கொண்டே இருந்தது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், மயிலம், கூட்டேரிப்பட்டு, வானூர், மரக்காணம் உள்பட பல பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது.
வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்தது. காதை செவிடாக்கும் சத்தத்துடன் பலத்த இடி-மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மின்னல் காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பத்தில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது. தென்னை மரத்தின் அருகே வீட்டில் படித்துக் கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவி பராசக்தி(வயது 13)க்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுக்றிது
கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் உள்பட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பண்ருட்டியில் பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழை காரணமாக திருப்பாதிரி புலியூர் பாடலீஸ்வரர் கோவிலுக்குள் மழைநீர் தேங்கியது. இதனால் நேற்று பிரதோச விழாவுக்கு வந்த பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை அதிகாலை 3 மணிவரை பெய்து கொண்டே இருந்தது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், மயிலம், கூட்டேரிப்பட்டு, வானூர், மரக்காணம் உள்பட பல பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்தது.
Next Story






