என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி விழா: போலீசாரின் நியாயமான கட்டுப்பாடுகளை ஏற்போம்- அர்ஜூன் சம்பத் பேட்டி
    X

    விநாயகர் சதுர்த்தி விழா: போலீசாரின் நியாயமான கட்டுப்பாடுகளை ஏற்போம்- அர்ஜூன் சம்பத் பேட்டி

    விநாயகர் சதுர்த்தி விழாவில் காவல்துறை விதிக்ககூடிய நியாயமான கட்டுபாடுகளை ஏற்றுக்கொள்கிறோம் என அர்ஜூன் சம்பத் கூறினார்.

    சீர்காழி:

    சீர்காழி பஜனை மடத்தில் இந்து மக்கள் கட்சி நாகை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மண்டல அமைப்பாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பொன்னுசாமி, புதுவை மாநில தலைவர் மஜ்ஜினி, மாவட்ட தலைவர் சோலை.கோவிந்தராஜன், அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர தலைவர் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழ்நாடு வேளாங்கண்ணி பேராலயம் கொடியேற்று விழாவில் இந்து சமய நம்பிக் கைகளை புண்படுத்தும் விதமாக சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. காவி, ஸ்படிகம், ருத்ராட்சம், தீபவழிபாடு, கொடியேற்றுதல் இவையெல்லாம் இந்து சமய சடங்குகள் ஆகும். பாதயாத்திரை பக்தர்கள் ஸ்படிக, துளசி, ருத்ராட்ச மாலைகளில் சிலுவைகளை அணிந்து கொண்டு மது, மாமிசம் சாப்பிடுகிறார்கள். இவை இந்து மத சின்னங்களை அவமதிப்பதாகும்.

    இந்து மத சடங்குகளை பேராலயத்தில் செய்வதற்கு அரசு தடை விதிக்கவேண்டும். நாகை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. புதிய கல்விக்கொள்கையில் தமிழ் பயிற்று மொழியாக வரவேண்டும். தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், காஷ்மீர் மற்றும் இலங்கை பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்துக்களை மீண்டும் அப்பகுதியிலேயே குடியமர்த்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவில் காவல்துறை விதிக்ககூடிய நியாயமான கட்டுபாடுகளை ஏற்றுக்கொள்கிறோம். அதே சமயத்தில் புதிய இடங்களில் விநாயகர் சிலை வழிப்பாட்டிற்கு அனுமதி இல்லை என்பது போன்ற சட்ட விரோத நிபந்தனைகள் விதிக்கப்பட்டால் தடையை மீறி ஊர்வலத்தை வெற்றிகரமாக நடத்துவோம். சென்னை ஜஸ்ஹவுஸ் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×