என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரம் அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்
    X

    மாமல்லபுரம் அருகே 2 மகன்களுடன் பெண் மாயம்

    மாமல்லபுரம் அருகே 2 மகன்களுடன் மாயமான பெண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையனூர் பழைய மகாபலிபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி துளசி (வயது 25). இவர்களுக்கு ரதூன்ராஜ், ரதுனேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 24-ந் தேதி ராஜேஷ் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி துளசி, மகன்கள் ரதூன்ராஜ், ரதுனேஷ் ஆகிய 3 பேரும் இல்லை.

    பின்னர் அக்கம் பக்கத்திலும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடினார். இன்று வரை 3 பேரும் கிடைக்கவில்லை. எனவே மாமல்லபுரம் போலீசில் மனைவி துளசியையும், 2 மகன்களையும் காணவில்லை என ராஜேஷ் புகார் கொடுத்துள்ளார்.

    மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகிறார்கள். துளசி பலமுறை கணவர் ராஜேசுடன் சண்டை போட்டு வீட்டைவிட்டு போய்விடுவதும் பின்னர் வந்து விடுவதுமாக இருந்து வந்துள்ளார். இந்த முறை போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு 2 குழந்தைகளையும் அழைத்து சென்றிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் துளசியையும், குழந்தைகளையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×