என் மலர்
செய்திகள்

அடையாறில் டேங்கர் லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய எண்ணெய்
அடையாறு சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய எண்ணெயை பெண்கள் குடம் குடமாக பிடித்து சென்றனர்.
திருவான்மியூர்:
சென்னை துறைமுகத்தில் இருந்து மேடவாக்கத்தில் உள்ள காளீஸ்வரி நிறுவனத்துக்கு சொந்தமான டேங்கர் லாரி 20 ஆயிரம் லிட்டர் எண்ணெயை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. லாரியை தண்டையார்பேட்டையை சேர்ந்த டிரைவர் வரதராஜன் ஓட்டினார்.
இன்று அதிகாலை 3.40 மணி அளவில் அடையாறு மேம்பாலம் அருகே லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் லாரி தறிகெட்டு ஓடியது.
திடீரென்று லாரி சாலை நடுவில் இருந்த இரும்பு தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு சென்றது. பின்னர் சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் லாரியின் முன் சக்கரங்கள் துண்டுதுண்டாக உடைந்து சென்றன. பின் சக்கரமும் பஞ்சரானதால் லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த எண்ணெய் ரோட்டில் ஆறாக ஓடியது. 10 ஆயிரம் லிட்டர் எண்ணெய் லாரியில் இருந்து ஓடியது.

இதனால் அந்த பகுதி பெண்கள் மற்றும் பொது மக்கள் குடம் மற்றும் பக்கெட்டை எடுத்துக் கொண்டு அங்கு ஓடி வந்தனர். சாலையில் ஆறாக ஓடிய எண்ணெயை குடம் குடமாக பிடித்துச் சென்றனர். அதில் சிலர் எண்ணெய் வழுக்கி கீழே விழுந்தனர்.
பின்னர் அதையும் பொருட்படுத்தாமல் எழுந்து எண்ணை பிடித்து சென்றனர். சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் எண்ணெய் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களை விரட்டிவிட்டனர். பின்னர் துப்புரவு ஊழியர்களை வரவழைத்து ரோட்டில் கொட்டிய எண்ணெயை சுத்தம் செய்தனர். பின்னர் 5 லாரிகளில் மணல் கொண்டு வந்து சாலையில் கொட்டி சரிசெய்தனர்.

பின்னர் மாற்று லாரி கொண்டுவரப்பட்டு லாரியில் மிச்சம் இருந்த 10 ஆயிரம் லிட்டர் எண்ணெய் குழாய் மூலம் அதில் ஏற்றப்பட்டது.
எண்ணெய் ரோட்டில் ஓடியதை மழைநீர் என்று கருதி அதில் 2 மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து மேடவாக்கத்தில் உள்ள காளீஸ்வரி நிறுவனத்துக்கு சொந்தமான டேங்கர் லாரி 20 ஆயிரம் லிட்டர் எண்ணெயை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. லாரியை தண்டையார்பேட்டையை சேர்ந்த டிரைவர் வரதராஜன் ஓட்டினார்.
இன்று அதிகாலை 3.40 மணி அளவில் அடையாறு மேம்பாலம் அருகே லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் லாரி தறிகெட்டு ஓடியது.
திடீரென்று லாரி சாலை நடுவில் இருந்த இரும்பு தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு சென்றது. பின்னர் சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் லாரியின் முன் சக்கரங்கள் துண்டுதுண்டாக உடைந்து சென்றன. பின் சக்கரமும் பஞ்சரானதால் லாரி கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த எண்ணெய் ரோட்டில் ஆறாக ஓடியது. 10 ஆயிரம் லிட்டர் எண்ணெய் லாரியில் இருந்து ஓடியது.

இதனால் அந்த பகுதி பெண்கள் மற்றும் பொது மக்கள் குடம் மற்றும் பக்கெட்டை எடுத்துக் கொண்டு அங்கு ஓடி வந்தனர். சாலையில் ஆறாக ஓடிய எண்ணெயை குடம் குடமாக பிடித்துச் சென்றனர். அதில் சிலர் எண்ணெய் வழுக்கி கீழே விழுந்தனர்.
பின்னர் அதையும் பொருட்படுத்தாமல் எழுந்து எண்ணை பிடித்து சென்றனர். சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் எண்ணெய் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொது மக்களை விரட்டிவிட்டனர். பின்னர் துப்புரவு ஊழியர்களை வரவழைத்து ரோட்டில் கொட்டிய எண்ணெயை சுத்தம் செய்தனர். பின்னர் 5 லாரிகளில் மணல் கொண்டு வந்து சாலையில் கொட்டி சரிசெய்தனர்.

பின்னர் மாற்று லாரி கொண்டுவரப்பட்டு லாரியில் மிச்சம் இருந்த 10 ஆயிரம் லிட்டர் எண்ணெய் குழாய் மூலம் அதில் ஏற்றப்பட்டது.
எண்ணெய் ரோட்டில் ஓடியதை மழைநீர் என்று கருதி அதில் 2 மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர்.
Next Story






