என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி ஆணை வழங்கி 51 பேரிடம் ரூ.85 லட்சம் ஏமாற்றினர்: மோசடி செய்த பணத்தில் பெண்களுடன் உல்லாசம்
    X

    போலி ஆணை வழங்கி 51 பேரிடம் ரூ.85 லட்சம் ஏமாற்றினர்: மோசடி செய்த பணத்தில் பெண்களுடன் உல்லாசம்

    திருப்பத்தூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ.85 லட்சம் மோசடி செய்த பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளான்.
    திருப்பத்தூர்:

    பேரணாம்பட்டு தாலுகா வளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் பாலசந்தர் (வயது 41), கோவிந்தராஜ் மகன் வெங்கடேசன் (21), அருண் (20). இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அருகே உள்ள சந்திரபுரம் கொட்டாவூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜெயராஜ் (37) என்பவரை சந்தித்தனர். அப்போது தங்களுக்கு அரசுத்துறை அதிகாரிகளுடன் பழக்கம் இருப்பதாகவும், ரூ.2½ லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினர்.

    அதனை நம்பி அவர்களிடம் ரூ.2½ லட்சத்தை ஜெயராஜ் கொடுத்தார். மேலும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் 51 பேர் பாலசந்தர், வெங்கடேசன், அருண் ஆகியோரை நம்பி மொத்தம் ரூ.84 லட்சத்து 95 ஆயிரம் வழங்கியிருந்தனர்.

    பின்னர் பணம் கொடுத்தவர்களிடம் உங்களுக்கான பணி நியமன ஆணை அரசுத்துறைகள் மூலமாக பதிவு தபாலில் வரும் என தெரிவித்தனர். அதன்படி சில மாதங்கள் கழித்து பணம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் பதிவுத்தபால் ஒன்று வந்தது. அதில் அரசு பணி நியமனம் வழங்கப்பட்டதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு அந்த பணி நியமன ஆணையை வைத்து விசாரித்தபோது, அவை போலியான பணி நியமன ஆணை என தெரியவந்தது.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசந்தர், வெங்கடேசன், அருண் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் பாலசந்திரன் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டுள்ளார். இவர்களிடம் இருந்து பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. மோசடி செய்த பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிவித்துள்ளான். நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×