என் மலர்
செய்திகள்

ஊரப்பாக்கத்தில் நடந்த பெண் கொலை சம்பவத்தில் நகை கொள்ளை: கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
ஊரப்பாக்கத்தில் 16¾ பவுன் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது அம்பலம் ஆகி உள்ளது. கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வண்டலூர்:
சென்னையை அடுத்த ஊரப்பாக்கம், பிரியாநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அனுஷியா. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகின்றனர். அனுஷியாவின் தந்தை பாலகிருஷ்ணன், தாய் சரஸ்வதி (வயது 56) ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு ஊரப்பாக்கம் வந்து மகளுடன் தங்கி இருந்தனர். அவர்களது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம்.
கடந்த 3 நாட்களுக்கு முன் பாலகிருஷ்ணன் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டார். சரஸ்வதி மகளுடனே தங்கி இருந்தார். இவர்களுடன் செல்வராஜின் தம்பி மோகனும் இதே வீட்டில் தங்கியிருந்து ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். செல்வராஜ், அனுஷியா, மோகன் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டனர்.
வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி முதல் தளத்தில் வீடு இருப்பதால் வழக்கம்போல வெளிப்புற கிரில் கதவை பூட்டிக் கொண்டு வீட்டுக்குள் இருந்தார். அனுஷியா இரவு 7 மணி அளவில் வீடு திரும்பியபோது, பூட்டியிருந்த கிரில் கதவிலும், அருகிலும் ரத்தக்கறையாக இருந்தது. அனுஷியா கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சரஸ்வதி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சரஸ்வதி கழுத்தில் தங்கச்சங்கிலி இருந்ததால் நகைக்காக இந்த கொலை நடக்கவில்லை என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் போலீசாரின் தொடர் விசாரணையில் அவர் அணிந்திருந்த சில நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட சரஸ்வதி கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலி மற்றும் கையில் வளையல் இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்து இருக்காது என்று கருதி நாங்கள் விசாரணையை வேறு திசையில் நடத்தினோம். உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்வதற்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்ட பகுதியை சோதனை செய்தபோது அவர் காதில் அணிந்து இருந்த கம்மல் திருட்டுப்போயிருந்தது தெரிந்தது.
இதனால் அவரது மகள் அனுஷியாவிடம் இதுபற்றி விசாரித்தோம். சரஸ்வதி எப்போதும் கழுத்தில் 2 தங்கச்சங்கிலி மற்றும் கையில் ஒரு மோதிரம் அணிந்து இருப்பார். ஆனால் அவரது கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலி மட்டும் இருந்தது, மோதிரம், கம்மல் ஆகியவை இல்லை, வீட்டில் படுக்கை அறையில் இருந்த 11¾ பவுன் தங்க நகையும் காணவில்லை. அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த 11¾ பவுன் நகை என மொத்தம் 16¾ பவுன் தங்க நகை திருட்டுபோயுள்ளதாக அனுஷியா கூறினார்.
ஆகவே நகைக்காகவே சரஸ்வதி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொலையாளியை பிடிப்பதற்கு வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொலை நடந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள தகவல்களை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. சரஸ்வதியின் உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் கொலையாளி பிடிபடுவான்.
இவ்வாறு உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.
சென்னையை அடுத்த ஊரப்பாக்கம், பிரியாநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அனுஷியா. இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகின்றனர். அனுஷியாவின் தந்தை பாலகிருஷ்ணன், தாய் சரஸ்வதி (வயது 56) ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு ஊரப்பாக்கம் வந்து மகளுடன் தங்கி இருந்தனர். அவர்களது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம்.
கடந்த 3 நாட்களுக்கு முன் பாலகிருஷ்ணன் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டார். சரஸ்வதி மகளுடனே தங்கி இருந்தார். இவர்களுடன் செல்வராஜின் தம்பி மோகனும் இதே வீட்டில் தங்கியிருந்து ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். செல்வராஜ், அனுஷியா, மோகன் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டனர்.
வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி முதல் தளத்தில் வீடு இருப்பதால் வழக்கம்போல வெளிப்புற கிரில் கதவை பூட்டிக் கொண்டு வீட்டுக்குள் இருந்தார். அனுஷியா இரவு 7 மணி அளவில் வீடு திரும்பியபோது, பூட்டியிருந்த கிரில் கதவிலும், அருகிலும் ரத்தக்கறையாக இருந்தது. அனுஷியா கதவை திறந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சரஸ்வதி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த கொலை குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சரஸ்வதி கழுத்தில் தங்கச்சங்கிலி இருந்ததால் நகைக்காக இந்த கொலை நடக்கவில்லை என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் போலீசாரின் தொடர் விசாரணையில் அவர் அணிந்திருந்த சில நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கொலை செய்யப்பட்ட சரஸ்வதி கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலி மற்றும் கையில் வளையல் இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்து இருக்காது என்று கருதி நாங்கள் விசாரணையை வேறு திசையில் நடத்தினோம். உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்வதற்கு முன்பு கழுத்து அறுக்கப்பட்ட பகுதியை சோதனை செய்தபோது அவர் காதில் அணிந்து இருந்த கம்மல் திருட்டுப்போயிருந்தது தெரிந்தது.
இதனால் அவரது மகள் அனுஷியாவிடம் இதுபற்றி விசாரித்தோம். சரஸ்வதி எப்போதும் கழுத்தில் 2 தங்கச்சங்கிலி மற்றும் கையில் ஒரு மோதிரம் அணிந்து இருப்பார். ஆனால் அவரது கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலி மட்டும் இருந்தது, மோதிரம், கம்மல் ஆகியவை இல்லை, வீட்டில் படுக்கை அறையில் இருந்த 11¾ பவுன் தங்க நகையும் காணவில்லை. அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த 11¾ பவுன் நகை என மொத்தம் 16¾ பவுன் தங்க நகை திருட்டுபோயுள்ளதாக அனுஷியா கூறினார்.
ஆகவே நகைக்காகவே சரஸ்வதி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொலையாளியை பிடிப்பதற்கு வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொலை நடந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள தகவல்களை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது. சரஸ்வதியின் உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் கொலையாளி பிடிபடுவான்.
இவ்வாறு உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.
Next Story






