என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை அருகே உணவில் விஷம் கலந்து ஒரே குடும்பத்தில் 3 பேரை கொல்ல முயற்சி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள களக்குடி கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி கோமதி. மகள் ஆர்த்தி, தாய் முத்தம்மாள். சம்பவத்தன்று இவர்கள் 3பேரும் வீட்டில் உள்ள உணவை சாப்பிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் 3பேரும் மயக்கமடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, உணவில் விஷம் கலந்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து 3பேரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு 3பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உணவில் விஷம் கலந்தது யார் என்று தெரியவில்லை. இதனிடையே குழந்தைவேல் நாகுடி போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் தனது குடும்பத்துக்கும், அப்பகுதியை சேர் ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருப்பதாகவும், அதனால் அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 3 பேரும் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல் வெளியாகும் என தெரிகிறது.






