என் மலர்
செய்திகள்

கள்ளிமேடு கோவில் திருவிழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தர்ராஜன்
இரு தரப்பினரையும் அழைத்து பேசி கோவில் திருவிழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கள்ளிமேடு கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இதனால் இந்த ஆண்டு திருவிழா நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கள்ளி மேட்டிற்கு பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் வந்தார். அவர் தனித் தனியாக இரு தரப்பினரையும் அழைத்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
கள்ளிமேடு பத்திர காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரையும் தமிழக அரசு அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு என்பது திருவிழாவுக்கு தடை விதிப்பது அல்ல.
தமிழகத்தில் தலித் மக்களுக்கு எந்த ஒரு இடத்திலும் இடையூறு ஏற்படக்கூடாது. எனவே அரசு தீவிர நடவடிக்கை எடுத்து திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த பிரச்சினையை காரணமாக வைத்து மதம் மாறுவோம் என்று கூறுவதை நிறுத்த வேண்டும். திருச்சி சிவா எம்.பி.யை பொது இடத்தில் அ.தி.மு.க. எம்.பி சசிகலா புஷ்பா தாக்கியது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கள்ளிமேடு கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இதனால் இந்த ஆண்டு திருவிழா நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கள்ளி மேட்டிற்கு பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் வந்தார். அவர் தனித் தனியாக இரு தரப்பினரையும் அழைத்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
கள்ளிமேடு பத்திர காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரையும் தமிழக அரசு அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு என்பது திருவிழாவுக்கு தடை விதிப்பது அல்ல.
தமிழகத்தில் தலித் மக்களுக்கு எந்த ஒரு இடத்திலும் இடையூறு ஏற்படக்கூடாது. எனவே அரசு தீவிர நடவடிக்கை எடுத்து திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த பிரச்சினையை காரணமாக வைத்து மதம் மாறுவோம் என்று கூறுவதை நிறுத்த வேண்டும். திருச்சி சிவா எம்.பி.யை பொது இடத்தில் அ.தி.மு.க. எம்.பி சசிகலா புஷ்பா தாக்கியது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






