என் மலர்
செய்திகள்

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் மாயமானதை தொடர்ந்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடந்த 30-ந்தேதி 143 விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் அனைவரும் வழக்கம்போல் நேற்று மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 36), என்பவர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அவரும், அதேபகுதியை சேர்ந்த வடமாலை மகன் மோகன்தாஸ் (29), பாண்டி (37), பழனி (25) ஆகிய 4 மீனவர்கள் மட்டும் கரை திரும்பவில்லை.
இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர் விசைப்படகு மீனவர் சங்கத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீண்டும் 4 பேர் கொண்ட குழுவினர் கடலுக்குள் சென்று காணாமல்போன அந்த 4 மீனவர்களை தேடி சென்றனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடந்த 30-ந்தேதி 143 விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் அனைவரும் வழக்கம்போல் நேற்று மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 36), என்பவர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற அவரும், அதேபகுதியை சேர்ந்த வடமாலை மகன் மோகன்தாஸ் (29), பாண்டி (37), பழனி (25) ஆகிய 4 மீனவர்கள் மட்டும் கரை திரும்பவில்லை.
இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர் விசைப்படகு மீனவர் சங்கத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீண்டும் 4 பேர் கொண்ட குழுவினர் கடலுக்குள் சென்று காணாமல்போன அந்த 4 மீனவர்களை தேடி சென்றனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Next Story






