என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் பணிமனைக்கு சென்ற 2 ரெயில் என்ஜின்கள் தடம் புரண்டன
ஈரோட்டில் பணி மனைக்கு சென்ற 2 ரெயில் என்ஜின்கள் தடம் புரண்டன.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்திற்கு அருகில் டீசல் என்ஜின் பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் டீசல் நிரப்புதல், என்ஜினில் பழுது நீக்கம் ஆகிய பணிகள் செய்யப்படும்.
இந்த நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து பணிமனைக்கு 3 ரெயில் என்ஜின்கள் நேற்று மதியம் கொண்டு செல்லப்பட்டன. அடுத்தடுத்து ஒன்றாக இணைக்கப்பட்டு இந்த என்ஜின்கள் கொண்டு செல்லப்பட்டன. காசிப்பாளையத்தில் புதிதாக கட்டப்படும் பாலம் அருகில் பணிமனைக்கு செல்லும் தண்டவாளத்தின் வழியாக என்ஜின்களை டிரைவர் ஓட்டிச்சென்றார். அப்போது திடீரென முதலில் சென்ற 2 என்ஜின்கள் தடம் புரண்டன. இதில் முதலில் சென்ற ரெயில் என்ஜினின் பின்புறம் உள்ள 6 சக்கரங்களும், 2-வதாக இணைக்கப்பட்டு இருந்த என்ஜினின் வலதுபுறம் உள்ள 3 சக்கரங்களும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி நின்றது. தடம் புரண்டதை அறிந்த டிரைவர் என்ஜின்களை உடனடியாக நிறுத்தினார்.
ரெயில் நிலையத்தில் இருந்து பணிமனைக்கு செல்லும் தண்டவாளப்பாதை மாறும் இடம் என்பதால் டிரைவர் என்ஜின்களை மெதுவாக ஓட்டி சென்றார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுபற்றி என்ஜின் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து தடம் புரண்ட ரெயில் என்ஜின்களை மீட்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது முதல் என்ஜினும், 2-வது என்ஜினும் பிரிக்கப்பட்டது. அதன்பின்னர் பணிமனையில் இருந்து பளுதூக்கும் எந்திரம் (ஜாக்கி) வரவழைக்கப்பட்டு ரெயில் என்ஜின்களை தண்டவாளத்தில் இருந்து தூக்கி நிறுத்தும் பணி நடந்தது. நேற்று மாலையில் ரெயில் என்ஜின்கள் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் பழுதடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டது.
ரெயில் என்ஜின்கள் தடம் புரண்ட தண்டவாளம் பணிமனைக்கு செல்லும் வழி என்பதால் மற்ற ரெயில்கள் செல்வதில்லை. இதனால் நேற்று ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. எனவே அனைத்து ரெயில்களும் சரியான நேரத்திற்கு வந்து சென்றன. ரெயில் என்ஜின்கள் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு ரெயில் நிலையத்திற்கு அருகில் டீசல் என்ஜின் பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் டீசல் நிரப்புதல், என்ஜினில் பழுது நீக்கம் ஆகிய பணிகள் செய்யப்படும்.
இந்த நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து பணிமனைக்கு 3 ரெயில் என்ஜின்கள் நேற்று மதியம் கொண்டு செல்லப்பட்டன. அடுத்தடுத்து ஒன்றாக இணைக்கப்பட்டு இந்த என்ஜின்கள் கொண்டு செல்லப்பட்டன. காசிப்பாளையத்தில் புதிதாக கட்டப்படும் பாலம் அருகில் பணிமனைக்கு செல்லும் தண்டவாளத்தின் வழியாக என்ஜின்களை டிரைவர் ஓட்டிச்சென்றார். அப்போது திடீரென முதலில் சென்ற 2 என்ஜின்கள் தடம் புரண்டன. இதில் முதலில் சென்ற ரெயில் என்ஜினின் பின்புறம் உள்ள 6 சக்கரங்களும், 2-வதாக இணைக்கப்பட்டு இருந்த என்ஜினின் வலதுபுறம் உள்ள 3 சக்கரங்களும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி நின்றது. தடம் புரண்டதை அறிந்த டிரைவர் என்ஜின்களை உடனடியாக நிறுத்தினார்.
ரெயில் நிலையத்தில் இருந்து பணிமனைக்கு செல்லும் தண்டவாளப்பாதை மாறும் இடம் என்பதால் டிரைவர் என்ஜின்களை மெதுவாக ஓட்டி சென்றார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுபற்றி என்ஜின் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து தடம் புரண்ட ரெயில் என்ஜின்களை மீட்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது முதல் என்ஜினும், 2-வது என்ஜினும் பிரிக்கப்பட்டது. அதன்பின்னர் பணிமனையில் இருந்து பளுதூக்கும் எந்திரம் (ஜாக்கி) வரவழைக்கப்பட்டு ரெயில் என்ஜின்களை தண்டவாளத்தில் இருந்து தூக்கி நிறுத்தும் பணி நடந்தது. நேற்று மாலையில் ரெயில் என்ஜின்கள் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் பழுதடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டது.
ரெயில் என்ஜின்கள் தடம் புரண்ட தண்டவாளம் பணிமனைக்கு செல்லும் வழி என்பதால் மற்ற ரெயில்கள் செல்வதில்லை. இதனால் நேற்று ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. எனவே அனைத்து ரெயில்களும் சரியான நேரத்திற்கு வந்து சென்றன. ரெயில் என்ஜின்கள் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






