என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: கலெக்டர் தகவல்
    X

    காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: கலெக்டர் தகவல்

    திருக்கழுக்குன்றம் கோவில் லட்சத்தீப திருவிழாவை முன்னிட்டு காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நாளை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்
    தாம்பரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் சங்கு தீர்த்த புஷ்கர மேளா-லட்சத்தீப திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. ஆகவே நாளை காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்ட வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) அன்று அரசு அலுவலகங்கள் பணிநாளாக இயங்கும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
    Next Story
    ×