என் மலர்
செய்திகள்

பு.புளியம்பட்டி அருகே யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைகள்.
மழையால் கொசுத்தொல்லை: ஊருக்குள் படையெடுக்கும் காட்டு யானைகள்
பவானிசாகர் வனப்பகுதி விளாமுண்டி காட்டிலிருந்து கடந்த 3 நாட்களாக 5 யானைகள் கொண்ட கூட்டம் ஊருக்குள் புகுந்து விடுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்ட வனப்பகுதியான சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழை தண்ணீர் வனப்பகுதிக்குள் சிறுசிறு குட்டைகள் போல்தேங்கி நிற்கிறது. இந்த தேங்கிய மழை தண்ணீரில் தற்போது பெரிய... பெரிய... கொசுக்கள் உற்பத்தியாகி நிரம்பி உள்ளது.
இந்த கொசுக்கள் யாவும் வன விலங்குகளை பாதம் பார்க்கிறது. அதிலும் யானைகளை மொய்த்து கடித்து பின்னிவிடுகிறது.
இந்த கொசுக்கடிக்கு பயந்து யானைகள் ஆளை விட்டால் போதும் என தற்போது காட்டைவிட்டு வெளியேறி ஊருக்குள் புகுகிறது. பவானிசாகர் வனப்பகுதி விளாமுண்டி காட்டிலிருந்து கடந்த 3 நாட்களாக 5 யானைகள் கொண்ட கூட்டம் ஊருக்குள் புகுந்து விடுகிறது.
பு.புளியம்பட்டி அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 யானைகளும் புகுந்து சுற்றி திரிகிறது.
இப்படி சுற்றிதிரியும் யானைகள் கண்ணில் தென்படும் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை துவம்சம்செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையுடன் உள்ளனர்.
நேற்று முன்தினம் தேவேந்திரன் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகளை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வனத்துறை ஊழியர்கள் 25 பேர் திரண்டு வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். காட்டுப்பக்கம் செல்லும் யானைகள் வனத்துக்குள் புகாமல் ஊர் எல்லையிலேயே மேய்கிறது.
இதனால் பவானிசாகர், பு.புளியம்பட்டி அருகே உள்ள கிராம மக்கள் குறிப்பாக விவசாயிகள் மிகவும் கவலையுடன் உள்ளனர். ஊருக்குள் யானைகள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட வனப்பகுதியான சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த மழை தண்ணீர் வனப்பகுதிக்குள் சிறுசிறு குட்டைகள் போல்தேங்கி நிற்கிறது. இந்த தேங்கிய மழை தண்ணீரில் தற்போது பெரிய... பெரிய... கொசுக்கள் உற்பத்தியாகி நிரம்பி உள்ளது.
இந்த கொசுக்கள் யாவும் வன விலங்குகளை பாதம் பார்க்கிறது. அதிலும் யானைகளை மொய்த்து கடித்து பின்னிவிடுகிறது.
இந்த கொசுக்கடிக்கு பயந்து யானைகள் ஆளை விட்டால் போதும் என தற்போது காட்டைவிட்டு வெளியேறி ஊருக்குள் புகுகிறது. பவானிசாகர் வனப்பகுதி விளாமுண்டி காட்டிலிருந்து கடந்த 3 நாட்களாக 5 யானைகள் கொண்ட கூட்டம் ஊருக்குள் புகுந்து விடுகிறது.
பு.புளியம்பட்டி அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 யானைகளும் புகுந்து சுற்றி திரிகிறது.
இப்படி சுற்றிதிரியும் யானைகள் கண்ணில் தென்படும் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை துவம்சம்செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையுடன் உள்ளனர்.
நேற்று முன்தினம் தேவேந்திரன் என்பவரின் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகளை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் வனத்துறை ஊழியர்கள் 25 பேர் திரண்டு வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். காட்டுப்பக்கம் செல்லும் யானைகள் வனத்துக்குள் புகாமல் ஊர் எல்லையிலேயே மேய்கிறது.
இதனால் பவானிசாகர், பு.புளியம்பட்டி அருகே உள்ள கிராம மக்கள் குறிப்பாக விவசாயிகள் மிகவும் கவலையுடன் உள்ளனர். ஊருக்குள் யானைகள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story






