என் மலர்
செய்திகள்

அந்தியூர் அருகே தூங்கி கொண்டிருந்த மனைவி வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்
அந்தியூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50).
இவரது மனைவி பெயர் பழனியம்மாள் (46). விவசாய கூலித்தொழிலாளி. இவர்களுக்கு மாலதி (25) என்ற ஒரு மகள் உள்ளார். திருமணமாகி விட்டது. தற்போது பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். மேலும் குருசாமி என்ற மகனும் உள்ளார். இவருக்கும் திருமணமாகி விட்டது.
அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
ராமச்சந்திரனுக்கு மனைவி பழனியம்மாள் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதேபோல் நேற்று இரவு அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு ராமச்சந்திரன் வெளியே சென்று விட்டார்.
இரவு வீட்டில் பழனியம்மாளும் மகள் மாலதியும் தூங்கி கொண்டிருந்தனர். மகன் குருசாமி மாமனார் வீட்டுக்கு போய் விட்டார்.
நள்ளிரவில் ஆத்திரத்துடன் அங்கு வந்த ராஜேந்திரன் அரிவாளால் தூங்கி கொண்டிருந்த மனைவியை வெட்டினார். இதில் கழுத்தில் பலமான வெட்டுகள் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார்.
அருகே படுத்திருந்த மகள் மாலதி எழுந்து பயத்துடன் வெளியே ஓடி சென்று சத்தம் போட்டார். அவரது சத்தத்தைக் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
வெட்டப்பட்ட பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வெள்ளி திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட பழனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாயமான கணவர் ராமச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் அந்தியூர் மற்றும் வெள்ளி திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50).
இவரது மனைவி பெயர் பழனியம்மாள் (46). விவசாய கூலித்தொழிலாளி. இவர்களுக்கு மாலதி (25) என்ற ஒரு மகள் உள்ளார். திருமணமாகி விட்டது. தற்போது பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். மேலும் குருசாமி என்ற மகனும் உள்ளார். இவருக்கும் திருமணமாகி விட்டது.
அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
ராமச்சந்திரனுக்கு மனைவி பழனியம்மாள் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதேபோல் நேற்று இரவு அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு ராமச்சந்திரன் வெளியே சென்று விட்டார்.
இரவு வீட்டில் பழனியம்மாளும் மகள் மாலதியும் தூங்கி கொண்டிருந்தனர். மகன் குருசாமி மாமனார் வீட்டுக்கு போய் விட்டார்.
நள்ளிரவில் ஆத்திரத்துடன் அங்கு வந்த ராஜேந்திரன் அரிவாளால் தூங்கி கொண்டிருந்த மனைவியை வெட்டினார். இதில் கழுத்தில் பலமான வெட்டுகள் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார்.
அருகே படுத்திருந்த மகள் மாலதி எழுந்து பயத்துடன் வெளியே ஓடி சென்று சத்தம் போட்டார். அவரது சத்தத்தைக் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
வெட்டப்பட்ட பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வெள்ளி திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட பழனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாயமான கணவர் ராமச்சந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் அந்தியூர் மற்றும் வெள்ளி திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






