என் மலர்
செய்திகள்

அப்துல் கலாம் நினைவுநாளில் கண்களை தானம் செய்த மாற்று திறனாளி வாலிபர்
அப்துல் கலாம் நினைவுநாளின் போது மாற்று திறனாளி வாலிபர் ஒருவர் தனது இரு கண்களையும் தானம் செய்துள்ளார்
கோபி:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது,
இதை யொட்டி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏராளமானோர் அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆனால் மாற்று திறனாளி வாலிபர் ஒருவர் அப்துல்கலாம் நினைவு நாளில் தனது கண்களையே தானம் செய்து உள்ளார்.
கோபி அருகே உள்ள புதுக்கரை புதூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது24) என்ற இவர் மாற்று திறனாளி ஆவார். மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் நேற்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது கண்களை தானம் செய்தார்.
இது பற்றி வெங்கடேசன் கூறும் போது, ‘‘மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்திய நாட்டுக்கு செய்த தியாகம் மிகப்பெரியது. அவரது நினைவை போற்றும் வகையில் இன்று எனது 2 கண்களையும் தானம் செய்து உள்ளேன்’’ என்று கூறினார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது,
இதை யொட்டி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏராளமானோர் அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆனால் மாற்று திறனாளி வாலிபர் ஒருவர் அப்துல்கலாம் நினைவு நாளில் தனது கண்களையே தானம் செய்து உள்ளார்.
கோபி அருகே உள்ள புதுக்கரை புதூரை சேர்ந்த வெங்கடேசன் (வயது24) என்ற இவர் மாற்று திறனாளி ஆவார். மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் நேற்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தனது கண்களை தானம் செய்தார்.
இது பற்றி வெங்கடேசன் கூறும் போது, ‘‘மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்திய நாட்டுக்கு செய்த தியாகம் மிகப்பெரியது. அவரது நினைவை போற்றும் வகையில் இன்று எனது 2 கண்களையும் தானம் செய்து உள்ளேன்’’ என்று கூறினார்.
Next Story






