என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அப்துல்கலாம் சிலை அகற்றம்: போலீசார் நடவடிக்கை
    X

    கடலூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அப்துல்கலாம் சிலை அகற்றம்: போலீசார் நடவடிக்கை

    கடலூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அப்துல்கலாம் சிலையை போலீசார் அகற்றியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாற்று ரோட்டில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தின் நுழைவுவாயில் முன்பு மஞ்சக்குப்பம் இளைஞர்கள் மன்றம் சார்பில் 4 அடி உயர பீடம் அமைக்கப்பட்டு அதில் 2 அடி உயர அப்துல்கலாம் சிலை அமைக்கப்பட்டது.

    அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி இன்று அந்தசிலை திறக்கப்பட்டது. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அனுமதியின்றி இந்த சிலை வைக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் அன்பழகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், கிராம நிர்வாக அதிகாரி அறிவழகன் வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    மஞ்சக்குப்பம் இளைஞர் மன்ற நிர்வாகிகளிடம் அனுமதியின்றி சிலை வைத்தது தவறு என்று எடுத்து கூறினார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் அனுமதி கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    அனுமதியின்றி சிலை வைக்கக்கூடாது என்று போலீசார் கூறினார்கள். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அப்துல்கலாம் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. பீடத்தை வருவாய் துறை ஊழியர்கள் அகற்றினர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×