என் மலர்
செய்திகள்

தீரன் சின்னமலை நினைவு நாள் அடுத்த மாதம் 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் பிரபாகர் அறிவிப்பு
தீரன் சின்னமலை நினைவு விழாவையொட்டி வரும் ஆகஸ்டு 2-ந் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
அடுத்த (ஆகஸ்டு) மாதம் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் விழா நடக்கிறது. அன்று அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் அரசு சார்பில் விழா கொண்டாடப்படுகிறது.
அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு மாவீரன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
தீரன் சின்னமலை நினைவு விழாவையொட்டி வரும் ஆகஸ்டு 2-ந் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறையாகும்.
இந்த விடுமுறையினை ஈடுசெய்யும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 20-ந்தேதி (சனிக்கிழமை)பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் தெரிவித்தார்.
அடுத்த (ஆகஸ்டு) மாதம் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் விழா நடக்கிறது. அன்று அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் அரசு சார்பில் விழா கொண்டாடப்படுகிறது.
அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு மாவீரன் தீரன் சின்னமலை சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
தீரன் சின்னமலை நினைவு விழாவையொட்டி வரும் ஆகஸ்டு 2-ந் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறையாகும்.
இந்த விடுமுறையினை ஈடுசெய்யும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 20-ந்தேதி (சனிக்கிழமை)பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் தெரிவித்தார்.
Next Story






