என் மலர்
செய்திகள்

தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கோட்டைப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மீனவர்கள் இன்று முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பதும், தாக்குதல் நடத்தி விரட்டியடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 மாதங்களில் மட்டும் 77 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 111 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாவதோடு தங்களின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த 77 மீனவர்கள் மற்றும் 111 விசைபடகுகளை மீட்க கோரி கோட்டைபட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் 250 விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் நேரடி, மறைமுகமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். அத்துடன் ஐஸ் விற்பனையாளர்கள், வெல்டிங் பட்டறை உரிமையாளர்கள் உள்ளிட்டோரும் பாதிகப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு கோட்டைபட்டினத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கோட்டைப்பட்டினம் விசைபடகு மீனவர் சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:-
தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல அச்சப்படுகின்ற நிலை நிலவுகிறது. இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்ந்த நடைபெற்று கொண்டே இருக்கிறது.
கடலுக்கு செல்லும் மீனவர்கள் திரும்பி வருவார்களா என்பது கேள்வி குறியாககே உள்ளது. தற்போது இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 77 பேர் மற்றும் 111 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், தற்போது இறால் விலை கடுமையாக விழ்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு தகுந்த விலையை அரசு கொடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மீனவர்கள் இன்று முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பதும், தாக்குதல் நடத்தி விரட்டியடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
எல்லைதாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 மாதங்களில் மட்டும் 77 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 111 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாவதோடு தங்களின் வாழ்வாதாரமும் கேள்விக் குறியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த 77 மீனவர்கள் மற்றும் 111 விசைபடகுகளை மீட்க கோரி கோட்டைபட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் 250 விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் நேரடி, மறைமுகமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். அத்துடன் ஐஸ் விற்பனையாளர்கள், வெல்டிங் பட்டறை உரிமையாளர்கள் உள்ளிட்டோரும் பாதிகப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு கோட்டைபட்டினத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கோட்டைப்பட்டினம் விசைபடகு மீனவர் சங்க தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:-
தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல அச்சப்படுகின்ற நிலை நிலவுகிறது. இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்ந்த நடைபெற்று கொண்டே இருக்கிறது.
கடலுக்கு செல்லும் மீனவர்கள் திரும்பி வருவார்களா என்பது கேள்வி குறியாககே உள்ளது. தற்போது இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 77 பேர் மற்றும் 111 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், தற்போது இறால் விலை கடுமையாக விழ்ச்சி அடைந்துள்ளது.
இதற்கு தகுந்த விலையை அரசு கொடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






