search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிப்பு: நீர்மட்டம் 52 அடியை தாண்டியது
    X

    பவானிசாகர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிப்பு: நீர்மட்டம் 52 அடியை தாண்டியது

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.

    30 அடிக்கும் கீழே சரிந்த பவானிசாகர் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி 52.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 210 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 205 கன அடி தண்ணீரும் வாய்க்காலுக்கு 5 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்தால் மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×