என் மலர்
செய்திகள்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகை அக்கரைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் வெற்றி வேல், விசைப்படகு உரிமையாளர். இவரது விசைப்படகில் வெற்றி வேல், ரமேஷ், அருள், ராஜூ, ஆனந்த், பிரவீன், மணியன், ஆனந்தராஜ் ஆகிய 8 பேர் நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதே போல் அக்கரைப்பேட்டையை சேர்ந்த வீரமணிக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த முத்து, பக்கிரிசாமி, இடும்பன்சாமி, ராமன், சுந்தர், தங்கராஜ், பன்னீர், ராஜூ, முருகவேல் ஆகிய 9 பேரும் கடலுக்கு சென்றனர்.
பருத்திதுறை பகுதியில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு எந்திர படகில் வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சுட்டவாறு மீனவர்கள் 17 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் மீனவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து சென்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் யாழ்ப்பாணம் சாப்னா ஜெயிலில் 17 மீனவர்களும் அடைக்கப்பட்டனர்.
மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதால் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகை அக்கரைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் வெற்றி வேல், விசைப்படகு உரிமையாளர். இவரது விசைப்படகில் வெற்றி வேல், ரமேஷ், அருள், ராஜூ, ஆனந்த், பிரவீன், மணியன், ஆனந்தராஜ் ஆகிய 8 பேர் நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதே போல் அக்கரைப்பேட்டையை சேர்ந்த வீரமணிக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த முத்து, பக்கிரிசாமி, இடும்பன்சாமி, ராமன், சுந்தர், தங்கராஜ், பன்னீர், ராஜூ, முருகவேல் ஆகிய 9 பேரும் கடலுக்கு சென்றனர்.
பருத்திதுறை பகுதியில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு எந்திர படகில் வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சுட்டவாறு மீனவர்கள் 17 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் மீனவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து சென்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் யாழ்ப்பாணம் சாப்னா ஜெயிலில் 17 மீனவர்களும் அடைக்கப்பட்டனர்.
மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதால் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story






