என் மலர்
செய்திகள்

நீர் பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடந்து உயர்ந்து வருவதால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ந்து வருகிறது.
இதே போன்று பவானிவாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில் குளிர்ச்சியான காற்றுடன் மழை பெய்ய தொடங்கி உள்ளதால். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் 30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கியதில் சிறிது சிறிதாக உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி 42 அடியை தொட்டது. மேலும் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 42.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 550 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பாசனத்துக்காக ஆற்றுக்கு 150 கன அடி நீரும், வாய்காலுக்கு 5 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடந்து உயர்ந்து வருவதால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றுடன் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ந்து வருகிறது.
இதே போன்று பவானிவாகர் அணை நீர்பிடிப்பு பகுதியில் குளிர்ச்சியான காற்றுடன் மழை பெய்ய தொடங்கி உள்ளதால். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் 30 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கியதில் சிறிது சிறிதாக உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி 42 அடியை தொட்டது. மேலும் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 42.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 550 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் பாசனத்துக்காக ஆற்றுக்கு 150 கன அடி நீரும், வாய்காலுக்கு 5 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடந்து உயர்ந்து வருவதால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Next Story






