என் மலர்
செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. தனித்து போட்டியா?: ஜி.கே.வாசன் பேட்டி
தமிழக உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவிலில் மறைந்த முன்னாள் எம்.பி. இளையபெருமாளின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்படி செய்தால்தான் சாதாரண மக்களுக்கும் காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படும்.
முல்லைப்பெரியாறு அணை சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் கேரளா கவர்னர் சட்டசபையில் இதைபற்றி பேசுவது ஏற்புடையதல்ல. அது தவறான முடிவு.
வருகிற உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. தனித்து போட்டியிடுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர் முன்னாள் எம்.பி. இளையபெருமாளின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
காட்டுமன்னார்கோவிலில் மறைந்த முன்னாள் எம்.பி. இளையபெருமாளின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைத்து சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்படி செய்தால்தான் சாதாரண மக்களுக்கும் காவல்துறை மீது நம்பிக்கை ஏற்படும்.
முல்லைப்பெரியாறு அணை சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் கேரளா கவர்னர் சட்டசபையில் இதைபற்றி பேசுவது ஏற்புடையதல்ல. அது தவறான முடிவு.
வருகிற உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. தனித்து போட்டியிடுவது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட தலைவர் முன்னாள் எம்.பி. இளையபெருமாளின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
Next Story






