என் மலர்
செய்திகள்

திருப்போரூர் முருகன் கோவில் உண்டியல் வருமானம் ரூ. 68 லட்சம்
திருப்போரூர் முருகன் கோயில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. உண்டியலில் 68 லட்சத்து 54 ஆயிரத்து 199 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 534 கிராம் தங்கமும், 6 கிலோ 700 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.
திருப்போரூர்:
திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
நேற்று காஞ்சிபுரம் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் நற்சோனை, கோயில் ஆய்வாளர் கோவிந்தராஜ் மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.
இதில் 68 லட்சத்து 54 ஆயிரத்து 199 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 534 கிராம் தங்கமும், 6 கிலோ 700 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன. உண்டியல் வருவாய் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் சென்னை சாய்குரூப் தன்னார்வலர்கள் மற்றும் திருப்போரூர் அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் நேற்று காலை முதல் மாலை வரை ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையைவிட இம்முறை கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
நேற்று காஞ்சிபுரம் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் பரணிதரன், கோயில் செயல் அலுவலர் நற்சோனை, கோயில் ஆய்வாளர் கோவிந்தராஜ் மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன.
இதில் 68 லட்சத்து 54 ஆயிரத்து 199 ரூபாய் ரொக்கம் மற்றும் சில்லரையாகவும், 534 கிராம் தங்கமும், 6 கிலோ 700 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன. உண்டியல் வருவாய் எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் சென்னை சாய்குரூப் தன்னார்வலர்கள் மற்றும் திருப்போரூர் அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் நேற்று காலை முதல் மாலை வரை ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி மாத உண்டியல் காணிக்கையைவிட இம்முறை கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






