என் மலர்
செய்திகள்

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் 44 மதுக்கடைகள் மூடப்பட்டன
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் இடங்களில் அமைந்திருந்த 44 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன.
கடலூர்:
தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, மதுக்கடைகளின் நேரத்தை குறைப்பது ஆகிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதையொட்டி முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணியில் இருந்து 12 மணியாக மாற்றப்பட்டது. 2-வது கட்டமாக நேற்று 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 225 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பள்ளி, கல்லூரிகள், பஸ் நிலையங்கள் என சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் இடங்களில் அமைந்திருந்த 15 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன. அந்த டாஸ்மாக் கடைகளில் உள்ள 6 ஆயிரம் மதுபாட்டில்களை லாரியில் ஏற்றி கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள மாவட்ட டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு சென்றனர். அங்கு மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 15 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய 35 ஊழியர்கள் கடலூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் டாஸ்மாக் கடைகளில் உள்ள காலியிடங்களுக்கும், அதிகமாக மது விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளுக்கும் அனுப்பப்பட உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 284 டாஸ்மாக் கடைகள் இருந்தன. சட்ட- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் பகுதிகளில் உள்ள 29 மதுக்கடைகள் மூடப்பட்டன. அங்கிருந்த ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் பொருட்கள் விழுப்புரம் காட்பாடி ரெயில்வே கேட் அருகே உள்ள நுகர்பொருள் வணிக கழக கட்டிடத்தில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு அனுப்பப்பட்டன. அங்கு அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய 29 சூப்பர்வைசர்கள், 35 ஊழியர்கள் மாவட்டத்தில் உள்ள மற்ற டாஸ்மாக் கடைகளில் பணிக்கு அனுப்பப்பட்டனர்.
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்கள் மற்ற டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது, மதுக்கடைகளின் நேரத்தை குறைப்பது ஆகிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இதையொட்டி முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணியில் இருந்து 12 மணியாக மாற்றப்பட்டது. 2-வது கட்டமாக நேற்று 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 225 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பள்ளி, கல்லூரிகள், பஸ் நிலையங்கள் என சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் இடங்களில் அமைந்திருந்த 15 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன. அந்த டாஸ்மாக் கடைகளில் உள்ள 6 ஆயிரம் மதுபாட்டில்களை லாரியில் ஏற்றி கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள மாவட்ட டாஸ்மாக் குடோனுக்கு கொண்டு சென்றனர். அங்கு மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 15 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய 35 ஊழியர்கள் கடலூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் டாஸ்மாக் கடைகளில் உள்ள காலியிடங்களுக்கும், அதிகமாக மது விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளுக்கும் அனுப்பப்பட உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 284 டாஸ்மாக் கடைகள் இருந்தன. சட்ட- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் பகுதிகளில் உள்ள 29 மதுக்கடைகள் மூடப்பட்டன. அங்கிருந்த ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் பொருட்கள் விழுப்புரம் காட்பாடி ரெயில்வே கேட் அருகே உள்ள நுகர்பொருள் வணிக கழக கட்டிடத்தில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு அனுப்பப்பட்டன. அங்கு அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய 29 சூப்பர்வைசர்கள், 35 ஊழியர்கள் மாவட்டத்தில் உள்ள மற்ற டாஸ்மாக் கடைகளில் பணிக்கு அனுப்பப்பட்டனர்.
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்கள் மற்ற டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Next Story






