என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

ஆரணியில் விபத்தில் மூளைச்சாவு இளம்பெண் உடல் உறுப்புகள் தானம்

ஆரணி:
ஆரணி அடுத்த கீழ்ப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தபாபு. நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா (வயது25). இவர்களுக்கு லோகேஷ்(6) என்ற மகனும், பூஜா(3) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 11-ந் தேதி ஆனந்தபாபு தனது பைக்கில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆரணிக்கு சென்றார். வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பினர். அப்போது, பைக்கில் இருந்து நிலைத்தடுமாறி சரண்யா கீழே விழுந்தார். இதனால் பைக் கட்டுப்பாட்டுக்குள் வராததால் ஆனந்தபாபுவும், குழந்தைகளுடன் கீழே விழந்தார்.
இந்த விபத்தில் சரண்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனந்தபாபு, குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர். படுகாயமடைந்த சரண்யா மீட்கப்பட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து சென்னை ராஜூவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சரண்யாவுக்கு நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது. இதனால் சரண்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி, சென்னை ராஜூவ்காந்தி ஆஸ்பத்திரியிலேயே சரண்யாவின் கண், நுரையீரல், இதய வால்வு உள்ளிட்ட உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தானமாக பெறப்பட்டது.
இதையடுத்து சரண்யா இறந்ததாக ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
