என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆள்கடத்தல் வழக்கு: பெருந்துறை கோர்ட்டில் யுவராஜ் வரும் 5-ந்தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு
    X

    ஆள்கடத்தல் வழக்கு: பெருந்துறை கோர்ட்டில் யுவராஜ் வரும் 5-ந்தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜ் மீது பெருந்துறை, வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்குகளும் பதிவாகி உள்ளது. இதில் பெருந்துறை கோர்ட்டில் வரும் 5-ம்தேதி ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    பெருந்துறை:

    திருச்செங்கோடு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜ் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

    ஜாமீனில் வந்து நெல்லையில் தங்கி இருக்கும் யுவராஜ் மீது ஈரோடு மாவட்டம் பெருந்துறை, வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்குகளும் பதிவாகி உள்ளது.

    மாவட்ட உரிமையியல் மற்றும் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் ஆள்கடத்தல் வழக்கு நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் யுவராஜ் நேற்று பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டும். இதையொட்டி நேற்று கோர்ட்டு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. யுவராஜ் கோர்ட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று யுவராஜ் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    நெல்லை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவதால் யுவராஜ் பெருந்துறை கோர்ட்டுக்கு வரவில்லை. அவர் பெயரில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை பெருந்துறை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

    எனினும் யுவராஜ் அடுத்த மாதம் (ஜுலை) 5-ந்தேதி பெருந்துறை கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×