என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக நலன் வேண்டி பெண் துறவிகள் நடைபயணம்: ஈரோட்டில் ஜெயின் மதத்தினர் வரவேற்பு
    X

    உலக நலன் வேண்டி பெண் துறவிகள் நடைபயணம்: ஈரோட்டில் ஜெயின் மதத்தினர் வரவேற்பு

    உலக நலன் வேண்டி நடைபயணம் மேற்கொண்டிருக்கும் பெண் துறவிகளுக்கு ஈரோட்டில் ஜெயின் மதத்தினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
    ஈரோடு:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெயின் மத பெண் துறவிகள் ஒரு தள்ளு வண்டியில் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதில் வயதான பெண் துறவியான சவுடேஸ்வரி என்பவர் மட்டும் அதிக அளவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இவர்கள் 3 பேரும் நடைபயணமாக ஈரோடு வருகை தந்தனர். ஈரோட்டில் வாழும் ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் அந்த பெண் துறவிகளுக்கு வரவேற்பு கொடுத்தனர். மேலும் பயணம் சிறக்க வாழ்த்தும் தெரிவித்தனர்.

    இவர்கள் உலக நலன் வேண்டி ஜெய்ப்பூரில் இருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கூறும்போது,

    ‘‘நாட்டில் இயற்கை சீற்றத்தால் பல விளைவுகள் ஏற்படுகிறது. இயற்கை பேரிடர்களிலிருந்து தப்பி மக்கள் நலமாக வாழ வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பு-பரிவு காட்டி வாழ வேண்டும். நாட்டின் வளழும் செழிக்க வேண்டும். இதற்கு கடவுள் அருள் புரிய வேண்டும்’’ என்று கூறினர்.
    Next Story
    ×