என் மலர்
செய்திகள்

வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கு: புதுச்சேரி காங்கிரஸ் கொறடா மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்
வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் மயிலாடுதுறை கோர்ட்டில் புதுச்சேரி காங்கிரஸ் கொறடா ஆஜர் ஆனார்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவிலில் மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் மூர்த்தி கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் 2–ந் தேதி மர்ம கும்பலால் வெடி குண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் பா.ம.க. மாநில துணைத் தலைவர் அகோரத்திற்கும் மூர்த்திக்கும் ஏற்பட்ட உட்கட்சி பூசலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கில் புதுச்சேரி மாநில பா.ம.க. செயலாளராக இருந்த அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் மற்றும் கூலிப்படையினர் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவர்களில் அனந்தராமன் மட்டும் தலைமறைவாக இருந்து முன்ஜாமீன் பெற்றிருந்தார். மற்ற 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. தற்போது அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.
கொலை வழக்கில் சேர்க்கப்பட்டதால் அனந்தராமன் பா.ம.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் காங்கிரசில் சேர்ந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மணவெளி தொகுதியில் போட்டியிட்டு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக உள்ளார்.
இந்த நிலையில் மூர்த்தி கொலை வழக்கு மயிலாடுதுறை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனந்தராமன், பா.ம.க. முன்னாள் மாநில துணை பொது செயலாளர் அகோரம் மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் உள்பட 15 பேர் ஆஜரானார்கள். இந்த வழக்கை அடுத்த மாதம் (ஜூலை) 6–ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மணிகண்டராஜா உத்தரவிட்டார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவிலில் மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் மூர்த்தி கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் 2–ந் தேதி மர்ம கும்பலால் வெடி குண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் பா.ம.க. மாநில துணைத் தலைவர் அகோரத்திற்கும் மூர்த்திக்கும் ஏற்பட்ட உட்கட்சி பூசலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கில் புதுச்சேரி மாநில பா.ம.க. செயலாளராக இருந்த அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் மற்றும் கூலிப்படையினர் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இவர்களில் அனந்தராமன் மட்டும் தலைமறைவாக இருந்து முன்ஜாமீன் பெற்றிருந்தார். மற்ற 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. தற்போது அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.
கொலை வழக்கில் சேர்க்கப்பட்டதால் அனந்தராமன் பா.ம.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் காங்கிரசில் சேர்ந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மணவெளி தொகுதியில் போட்டியிட்டு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக உள்ளார்.
இந்த நிலையில் மூர்த்தி கொலை வழக்கு மயிலாடுதுறை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனந்தராமன், பா.ம.க. முன்னாள் மாநில துணை பொது செயலாளர் அகோரம் மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் உள்பட 15 பேர் ஆஜரானார்கள். இந்த வழக்கை அடுத்த மாதம் (ஜூலை) 6–ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மணிகண்டராஜா உத்தரவிட்டார்.
Next Story






