என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் வகுப்பறை சேதம்: மரத்தின் அடியில் அமர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகள்
    X

    மழையால் வகுப்பறை சேதம்: மரத்தின் அடியில் அமர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகள்

    மழையால் வகுப்பறை சேதமடைந்ததால் பள்ளி வளாகத்தில் உள்ள அரச மரத்தின் அடியில் அமர வைத்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ளது கூடுவெளிச்சாவடி கிராமம். இந்த ஊரில் இருந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியானது கடந்த 2011-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

    ஆனால் கூடுதலாக ஆரம்பிக்கப்பட்ட 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படாததால், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சொந்தமான கட்டிடத்திலேயே உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 10 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள், 200 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழையில் ஒரு வகுப்பறை கட்டிடம் சேதமடைந்தது. எனவே அந்த கட்டிடத்தில் இருந்த 6-ம் வகுப்பு மாணவர்களை அங்கன்வாடி கட்டிடத்துக்கு மாற்றினார்கள்.

    7-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு வகுப்பறை இல்லாததால், அவர்களை பள்ளி வளாகத்தில் உள்ள அரச மரத்தின் அடியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

    பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மரத்தின் அடியில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது ஆடு-மாடுகளும் பள்ளி வளாகத்துக்குள் வருகின்றன. இது மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
    Next Story
    ×