என் மலர்
செய்திகள்

நாகையில் குறுவை சாகுபடிக்கு 5-வது ஆண்டு நினைவஞ்சலி: விவசாயிகள் நூதன போராட்டம்
தமிழக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 5-வது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்ததை தொடர்ந்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகை புதிய பஸ் நிலையம் அருகில் குறுவை சாகுபடிக்கு 5-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்
தமிழக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 5-வது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்ததை தொடர்ந்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகை புதிய பஸ் நிலையம் அருகில் குறுவை சாகுபடிக்கு 5-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கீழையூர் ஒன்றிய செயலாளர் ராமசாமி, நாகை ஒன்றிய பொறுப்பாளர் மோகன், நாகை ஒன்றிய அமைப்பாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொது செயலாளர் தனபாலன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதிக்கு குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது இல்லை.
காவிரி நீர் பங்கீடு குறித்து அரசிதழில் வெளியிட்டு 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜனதா அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் காவிரி நீர் பங்கீடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பொய்த்து போனது. ரூ.7 ஆயிரத்து 500 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் இடம் பெயர்ந்து நகரத்தை நோக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி பொய்த்து போனதால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், அனைத்து விவசாயிகளும் வாங்கிய விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி குறுவை சாகுபடிக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 5-வது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்ததை தொடர்ந்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகை புதிய பஸ் நிலையம் அருகில் குறுவை சாகுபடிக்கு 5-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கீழையூர் ஒன்றிய செயலாளர் ராமசாமி, நாகை ஒன்றிய பொறுப்பாளர் மோகன், நாகை ஒன்றிய அமைப்பாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொது செயலாளர் தனபாலன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதிக்கு குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது இல்லை.
காவிரி நீர் பங்கீடு குறித்து அரசிதழில் வெளியிட்டு 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜனதா அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் காவிரி நீர் பங்கீடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பொய்த்து போனது. ரூ.7 ஆயிரத்து 500 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் இடம் பெயர்ந்து நகரத்தை நோக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி பொய்த்து போனதால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், அனைத்து விவசாயிகளும் வாங்கிய விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி குறுவை சாகுபடிக்கு அஞ்சலி செலுத்தினர்.
Next Story






