என் மலர்
செய்திகள்

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதி குன்றி அருகே உள்ள கீழுர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 36) விவசாயி. இவர் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதி யோரம் மாடுமேய்க்க செல்வது வழக்கம்.
அதே போல் நேற்று காலை வழக்கம்போல் மாடுகளை ஓட்டிச்சென்றார். அப்போது மாடுகள் வனப்பகுதிக்குள் சென்றதால் மாடுகளை தேடி பெருமாள்சாமி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற போது புதர்மறைவில் நின்றிருந்த யானை பெருமாள் சாமியை துரத்தி சென்று தாக்கி துதிக்கையால் தூக்கி வீசியது.
யானை தாக்கியதால் வலதுகால் எலும்பு முறிவு ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து யானை அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது.
பின்னர் பெருமாள்சாமி மயக்கம் தெளிந்ததும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. கூக்குரலிட்டார். கால்வலி காரணமாக இதை தொடர்ந்து அப்பகுதியிலிருந்தவர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கடம்பூர் போலீசாரும், டி.என். பாளையம் வனத்துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர்.






