என் மலர்
செய்திகள்

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: நாளை ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் அவசர ஆலோசனை
கடலூரில் நாளை காலை 11 மணிக்கு ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி.யில் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், சுரங்கச் சட்டப்படி பஞ்சப்படி, என்.எல்.சி.க்கு வீடு மற்றும் நிலம் கொடுத்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது குறித்து 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தார்கள்.
ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து ஜூன் மாதம் 11–ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று ஏ.ஐ.டி.யூ.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சாலை சங்கத்தினர் என்.எல்.சி. நிர்வாகத்திடம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர்.
இதையடுத்து சென்னையில் மண்டல தொழிலாளர் நல ஆணையாளர் முன்னிலையில் என்.எல்.சி.அதிகாரிகளும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதையடுத்து இந்த பிரச்சனையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடலூரில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ஜகரட்சகன், பொதுசெயலாளர் சேகர், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
போராட்டத்தின் முடிவில் பொதுச்செயலாளர் சேகர் பேசும்போது கடலூரில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி. கட்சி அலுவலகத்தில் நாளை நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று கோரினார்.
என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்களா என்று ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வமணியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
கடலூரில் நாளை காலை 11 மணிக்கு ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தான் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடலாமா வேண்டாமா என்று இறுதி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெய்வேலி என்.எல்.சி.யில் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், சுரங்கச் சட்டப்படி பஞ்சப்படி, என்.எல்.சி.க்கு வீடு மற்றும் நிலம் கொடுத்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது குறித்து 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தார்கள்.
ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து ஜூன் மாதம் 11–ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று ஏ.ஐ.டி.யூ.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சாலை சங்கத்தினர் என்.எல்.சி. நிர்வாகத்திடம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர்.
இதையடுத்து சென்னையில் மண்டல தொழிலாளர் நல ஆணையாளர் முன்னிலையில் என்.எல்.சி.அதிகாரிகளும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதையடுத்து இந்த பிரச்சனையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடலூரில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ஜகரட்சகன், பொதுசெயலாளர் சேகர், ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
போராட்டத்தின் முடிவில் பொதுச்செயலாளர் சேகர் பேசும்போது கடலூரில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி. கட்சி அலுவலகத்தில் நாளை நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று கோரினார்.
என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்களா என்று ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வமணியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
கடலூரில் நாளை காலை 11 மணிக்கு ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தான் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடலாமா வேண்டாமா என்று இறுதி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






