என் மலர்
செய்திகள்

நங்கநல்லூரில் தபால் பெட்டியில் கிடந்த பாஸ்போர்ட்டுகளால் பரபரப்பு
நங்கநல்லூரில் தபால் பெட்டியில் கிடந்த பாஸ்போர்ட்டுகளால் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த நங்கநல்லூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தபால் பெட்டியில் இருந்து கடிதங்களை, தபால் ஊழியர் எடுத்தார். அப்போது அதில் கட்டுக்கட்டாக 25 புதிய பாஸ்போர்ட்டுகள் இருந்ததை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. அதிகாரிகள் பாஸ்போர்ட்டுகளை ஆய்வு செய்து, பின்னர் பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்போர்ட்டுகளை தபால் பெட்டியில் போட்டுச்சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புதிய பாஸ்போர்ட்டுகள் சென்னை, மதுரை உள்பட 7 நகரங்களுக்கு செல்ல வேண்டியது என தெரியவந்தது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தபால் பெட்டியில் இருந்து கடிதங்களை, தபால் ஊழியர் எடுத்தார். அப்போது அதில் கட்டுக்கட்டாக 25 புதிய பாஸ்போர்ட்டுகள் இருந்ததை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. அதிகாரிகள் பாஸ்போர்ட்டுகளை ஆய்வு செய்து, பின்னர் பழவந்தாங்கல் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்போர்ட்டுகளை தபால் பெட்டியில் போட்டுச்சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புதிய பாஸ்போர்ட்டுகள் சென்னை, மதுரை உள்பட 7 நகரங்களுக்கு செல்ல வேண்டியது என தெரியவந்தது. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






