என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணியிட மாற்றம் வாங்கி தருவதாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ. 4 லட்சம் மோசடி
    X

    பணியிட மாற்றம் வாங்கி தருவதாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ. 4 லட்சம் மோசடி

    பணியிட மாற்றம் வாங்கி தருவதாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பரங்கிப்பேட்டை:

    சிதம்பரம் அருகே துணிசிரமேடு கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரைக் கண்ணன் (வயது 40). இவருடைய உறவினர் மாரிசெல்வி. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்ததால், மாரிசெல்வி அவர் கடலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் வாங்கி வர முடிவு செய்தார்.

    இந்த நிலையில் கிள்ளை அருகே கீழச்சாவடி கிராமத்தை சேர்ந்த சுகுமாறன், மணிமாறன் ஆகியோர் மாரிசெல்வி மற்றும் செந்தாமரைக்கண்ணணை சந்தித்தனர். அப்போது ரூ.4 லட்சம் கொடுத்தால் பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு மாரிசெல்விக்கு பணியிட மாற்றம் வாங்கி தருகிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை நம்பி அவர்களிடம் ரூ.4 லட்சத்தை கொடுத்தனர்.

    ஆனால் அவர்கள் கூறியபடி பணியிட மாற்றம் வாங்கி தராமல் ஏமாற்றினர். சம்பவத்தன்று சுகுமாறன், மணிமாறன் ஆகியோரை செந்தாமரைக்கண்ணன் சந்தித்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார்.

    அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுகுமாறன், மணிமாறன் ஆகியோர் ஒன்று சேர்ந்து தாமரைக்கண்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து செந்தாமரைக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ் வழக்குப்பதிவு செய்து சுகுமாறன், மணிமாறன் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×