என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் கைதி தப்பி ஓட்டம்: 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு
புதுக்கோட்டையில் பாலியல் புகாரில் கைதான சரத்குமார் விசாரணைக்கு ஆஜராகாமல் தப்பி ஓட்டம். இதில் கவனக்குறைவாக செயல்பட்டதாக போலீஸ்காரர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குறும்பூர் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 22). ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த 2015-ல் இவர் மீது அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், சரத்குமார் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு அறந்தாங்கி போலீசாருக்கு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் அறந்தாங்கி போலீசார் சரத்குமாரை கைது செய்து, மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸ்காரர்கள் செந்தில்குமார், அன்பரசி ஆகியோர் அழைத்து சென்றனர்.
இந்நிலையில் பரிசோதனை அறைக்கு சென்ற சரத்குமார், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. பின்னர் அறைக்குள் சென்று பார்த்த போது, அவர் தப்பியோடியது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சரத்குமாரை தேடி வருகின்றனர். இதனிடையே கவனக்குறைவாக செயல்பட்டதாக போலீஸ்காரர்கள் செந்தில்குமார், அன்பரசி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.சந்தோஷ்ஹதிமனி உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள குறும்பூர் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 22). ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கடந்த 2015-ல் இவர் மீது அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், சரத்குமார் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு அறந்தாங்கி போலீசாருக்கு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் அறந்தாங்கி போலீசார் சரத்குமாரை கைது செய்து, மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸ்காரர்கள் செந்தில்குமார், அன்பரசி ஆகியோர் அழைத்து சென்றனர்.
இந்நிலையில் பரிசோதனை அறைக்கு சென்ற சரத்குமார், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. பின்னர் அறைக்குள் சென்று பார்த்த போது, அவர் தப்பியோடியது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சரத்குமாரை தேடி வருகின்றனர். இதனிடையே கவனக்குறைவாக செயல்பட்டதாக போலீஸ்காரர்கள் செந்தில்குமார், அன்பரசி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.சந்தோஷ்ஹதிமனி உத்தரவிட்டார்.
Next Story






