என் மலர்
செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரசாரம்: பண்ருட்டி பா.ம.க. வேட்பாளர் மீது வழக்கு
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் பண்ருட்டி பா.ம.க. வேட்பாளர் தர்மலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பண்ருட்டி:
பண்ருட்டி தொகுதி பா.ம.க. வேட்பாளராக தர்மலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பா.ம.க. முதல்–அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பண்ருட்டியில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் உள்ள இந்திராநகர் பகுதியில் பிரசார மேடை அமைக்கப்பட்டது. ஆனால் அன்புமணி ராமதாஸ் இரவு 10.20 மணி அளவில் பண்ருட்டி வந்தார். 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்பதால் அங்கு கூடியிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். அதன் பின்னர் பா.ம.க. வேட்பாளர் தர்மலிங்கம், நகர செயலாளர் நந்த கோபால் மற்றும் நிர்வாகிகள் அந்த பகுதியில் வாக்கு சேகரித்தனர்.
இது குறித்து பண்ருட்டி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேட்பாளர் தர்மலிங்கம், நகரசெயலாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் மீது இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்குப்பதிவு செய்தார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பண்ருட்டி தொகுதி பா.ம.க. வேட்பாளராக தர்மலிங்கம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பா.ம.க. முதல்–அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பண்ருட்டியில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் உள்ள இந்திராநகர் பகுதியில் பிரசார மேடை அமைக்கப்பட்டது. ஆனால் அன்புமணி ராமதாஸ் இரவு 10.20 மணி அளவில் பண்ருட்டி வந்தார். 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்பதால் அங்கு கூடியிருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். அதன் பின்னர் பா.ம.க. வேட்பாளர் தர்மலிங்கம், நகர செயலாளர் நந்த கோபால் மற்றும் நிர்வாகிகள் அந்த பகுதியில் வாக்கு சேகரித்தனர்.
இது குறித்து பண்ருட்டி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வேட்பாளர் தர்மலிங்கம், நகரசெயலாளர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் மீது இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்குப்பதிவு செய்தார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story






