என் மலர்
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கோர்ட்டில் சரண்
ஸ்ரீபெரும்புதூர், ஏப்.30–
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூரை சேர்ந் தவர் குட்டி என்ற வெங் கடேசன். அ.தி.மு.க.வில் ஒன்றியக்குழு தலைவ ராக பதவி வகித்து வந்தார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மனா கவும் இருந்தார்.
கடந்த 6 மாதங் களுக்கு முன்பு வெங்கடேசனிடம் இருந்து அ.தி.மு.க. ஒன்றிய குழு தலைவர் பதவி பறிக்கப் பட்டது. இதையடுத்து அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். கடந்த 27–ந் தேதி காரில் வெங்கடேசன் சுங்குவார் சத்திரத்துக்கு சென்றார்.
சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்ற வெங்கடேசனை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியால் சரமாரி யாக குத்தி கொலை செய்து விட்டு தப்பினர்.
பட்டப் பகலில் நடந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பா.ஜன தா பிரமுகர் வெங்கடேசன் கொலை தொடர்பாக ஸ்ரீபெரும் புதூர் அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், செம்பரம் பாக்கம் பகுதியை சேர்ந்த இன்பராஜன் ஆகிய 2 பேர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோர்ட் டில் நேற்று சரண் அடைந் தனர். ‘‘ அவர்களை சோலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.






