என் மலர்
செய்திகள்

கிண்டியில் கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்தது - 30 மாணவர்கள் உயிர் தப்பினர்
கிண்டியில் தனியார் கல்லூரிக்கு சொந்தமான பஸ் தீப்பிடித்து எரிந்தது, 30 மாணவர்கள் உயிர் தப்பினர்.
ஆலந்தூர்:
பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான ‘ஏ.சி.’ பஸ் இன்று காலை மயிலாப்பூரில் இருந்து 30 மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றது.
7 மணி அளவில் கிண்டி ஆல்டா சிக்னல் அருகே பஸ் வந்தபோது என்ஜினில் இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் பஸ்சை ரோட்டோரம் நிறுத்தினார்.
ஆனால் அதற்குள் பஸ்சில் தீ பிடித்து பரவியது. இதனால் அலறியடித்தபடி மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்கள். சிலர் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர்.
முக்கிய பகுதியான கிண்டி சாலையில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கிண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் பஸ் முற்றிலும் நாசமானது. மாணவர்கள் உடனடியாக பஸ்சில் இருந்து வெளியேறியதால் தப்பினர். 30 மாணவர்கள் மாற்று வாகனத்தில் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் கிண்டியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான ‘ஏ.சி.’ பஸ் இன்று காலை மயிலாப்பூரில் இருந்து 30 மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றது.
7 மணி அளவில் கிண்டி ஆல்டா சிக்னல் அருகே பஸ் வந்தபோது என்ஜினில் இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் பஸ்சை ரோட்டோரம் நிறுத்தினார்.
ஆனால் அதற்குள் பஸ்சில் தீ பிடித்து பரவியது. இதனால் அலறியடித்தபடி மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்கள். சிலர் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர்.
முக்கிய பகுதியான கிண்டி சாலையில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கிண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் பஸ் முற்றிலும் நாசமானது. மாணவர்கள் உடனடியாக பஸ்சில் இருந்து வெளியேறியதால் தப்பினர். 30 மாணவர்கள் மாற்று வாகனத்தில் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் கிண்டியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






