என் மலர்
செய்திகள்

ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ. 1½ கோடி பணம் பறிமுதல் பறக்கும் படை நடவடிக்கை தஞ்சை–3
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ. 1 கோடியே 48 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம் ;
ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ. 1 கோடியே 48 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து காரைக்காலுக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ் இன்று காலை 7 மணியளவில் நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள ஆலங்குடி வந்தது.
அப்போது வேதாரண்யம் தொகுதி தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அங்கிருந்த பையை சோதனை செய்த போது அதில் ரூ. 1 கோடியே 48 லட்சம் இருந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த பணத்தை அதே பஸ்சில் பயணம் செய்த மதுரை வெள்ளி மலையை சேர்ந்த மான்ராஜ் கொண்டு வந்தது தெரிய வந்தது. அவர் தனது மனைவியுடன் வந்து இருந்தார். பணத்தை யாருக்கு கொண்டு சென்றார்? ஹவாலா பணமா? என்பது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆம்னி பஸ்சில் ரூ. 1½ கோடி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட ரூ. 1 கோடியே 48 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து காரைக்காலுக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ் இன்று காலை 7 மணியளவில் நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள ஆலங்குடி வந்தது.
அப்போது வேதாரண்யம் தொகுதி தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் பறக்கும் படையினர் பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அங்கிருந்த பையை சோதனை செய்த போது அதில் ரூ. 1 கோடியே 48 லட்சம் இருந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த பணத்தை அதே பஸ்சில் பயணம் செய்த மதுரை வெள்ளி மலையை சேர்ந்த மான்ராஜ் கொண்டு வந்தது தெரிய வந்தது. அவர் தனது மனைவியுடன் வந்து இருந்தார். பணத்தை யாருக்கு கொண்டு சென்றார்? ஹவாலா பணமா? என்பது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆம்னி பஸ்சில் ரூ. 1½ கோடி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






