என் மலர்
செய்திகள்

வேப்பூர் அருகே அ.தி.மு.க பிரமுகர் கொலை: தந்தை-மகள் உள்பட 3 பேர் கைது
வேப்பூர் அருகே அ.தி.மு.க பிரமுகர் கொலையில் தந்தை, மகள் உள்பட 3 பேர் போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வார்டனாக பணியாற்றியவர் ராஜேந்திரன் (வயது 38). அ.தி.மு.க. மாணவரணி செயலாளராகவும் இருந்தார்.
விருத்தாசலம் அருகிலுள்ள குப்பநத்தத்தை சேர்ந்த இவர் கடந்த 13-ந் தேதி விடுதிக்கு தேவையான மளிகைப்பொருட்கள் வாங்க விருத்தாசலத்திற்கு தனது மினி வேனில் சென்றார். அப்போது 2 கார்களில் வந்த 20 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
இதற்கிடையே ராஜேந்திரனைக்கொன்ற கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் நேற்று விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் விருத்தாசலம்-கடலூர் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதற்கிடையே ராஜேந்திரனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குறுந்தங்கூரை சேர்ந்த ராஜவேல் (50), குப்பநத்தத்தைச் சேர்ந்த அய்யாசாமி மனைவி தனலட்சுமி (38), ராஜவேல் மகள் சூரியகாந்தி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடிவருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வார்டனாக பணியாற்றியவர் ராஜேந்திரன் (வயது 38). அ.தி.மு.க. மாணவரணி செயலாளராகவும் இருந்தார்.
விருத்தாசலம் அருகிலுள்ள குப்பநத்தத்தை சேர்ந்த இவர் கடந்த 13-ந் தேதி விடுதிக்கு தேவையான மளிகைப்பொருட்கள் வாங்க விருத்தாசலத்திற்கு தனது மினி வேனில் சென்றார். அப்போது 2 கார்களில் வந்த 20 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
இதற்கிடையே ராஜேந்திரனைக்கொன்ற கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் நேற்று விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் விருத்தாசலம்-கடலூர் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதற்கிடையே ராஜேந்திரனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குறுந்தங்கூரை சேர்ந்த ராஜவேல் (50), குப்பநத்தத்தைச் சேர்ந்த அய்யாசாமி மனைவி தனலட்சுமி (38), ராஜவேல் மகள் சூரியகாந்தி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடிவருகிறார்கள்.
Next Story






