என் மலர்
செய்திகள்

விருத்தாசலத்தில் ஜெயலலிதா பிரசாரம்: கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் பலி
விருத்தாசலம் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியானார்கள்.
விருத்தாசலம்:
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர்.
நேற்று மதியம் நடந்த இந்த கூட்டத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சி தொண்டர்கள் வெயிலில் நின்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உரையை கேட்டனர்.
கூட்டத்தில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் ஜெயலலிதாவை காண ஆர்வமிகுதியால் ஆண்கள் முண்டியடித்துக் கொண்டு பெண்கள் அமர்ந்து இருக்கும் பகுதிக்குள் நுழைந்தனர். இதனால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டு ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஒருவரையொருவர் நெட்டித்தள்ளிக் கொண்டனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கடும் வெயிலாலும், கூட்டநெரிசலாலும் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீரை தெளித்து பாதுகாப்பாக நிழல் உள்ள பகுதிக்கு அழைத்து சென்றனர்.
இந்த கூட்டநெரிசலில் சிதம்பரம் தெற்கு வாணியதெருவை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் கருணாகரன்டேவிட் (வயது 61), அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராதாகிருஷ்ணன் (45), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஜெயமணி(32), வல்லம்படுகை லோகநாதன் (55), கடலூர் ஆயுதப்படை பெண் போலீஸ் விஜயசாந்தி (24), சேத்தியாத்தோப்பு விழுப்பெரும்துரை ராமஜெயம் (32), காடாம்புலியூர் தாமரைக்கண்ணன் (56), விருத்தாசலம் செல்வராஜ் நகர் முத்துலட்சுமி (60), விருத்தாசலம் ராமசந்திரன்பேட்டை பூங்காவனம் (55) ஆகிய 9 பேரும் மயங்கி கீழே விழுந்தனர்.
அவர்கள் மீதும் அக்கம் பக்கத்தினர் தண்ணீர் தெளித்தும் தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்தனர். இதையடுத்து, 9 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் மேல்சிகிச்சைக்காக கருணாகரன்டேவிட் கடலூர் அரசு மருத்துவமனைக்கும், ராதாகிருஷ்ணன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். இறந்த கருணாகரன்டேவிட்டுக்கு மலர்கொடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ராதாகிருஷ்ணனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இதற்கிடையே விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் போலீஸ் விஜயசாந்தி உள்பட 7 பேரும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த கூட்டத்திற்கு கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர்.
நேற்று மதியம் நடந்த இந்த கூட்டத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கட்சி தொண்டர்கள் வெயிலில் நின்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உரையை கேட்டனர்.
கூட்டத்தில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் ஜெயலலிதாவை காண ஆர்வமிகுதியால் ஆண்கள் முண்டியடித்துக் கொண்டு பெண்கள் அமர்ந்து இருக்கும் பகுதிக்குள் நுழைந்தனர். இதனால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டு ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஒருவரையொருவர் நெட்டித்தள்ளிக் கொண்டனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கடும் வெயிலாலும், கூட்டநெரிசலாலும் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீரை தெளித்து பாதுகாப்பாக நிழல் உள்ள பகுதிக்கு அழைத்து சென்றனர்.
இந்த கூட்டநெரிசலில் சிதம்பரம் தெற்கு வாணியதெருவை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் கருணாகரன்டேவிட் (வயது 61), அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராதாகிருஷ்ணன் (45), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஜெயமணி(32), வல்லம்படுகை லோகநாதன் (55), கடலூர் ஆயுதப்படை பெண் போலீஸ் விஜயசாந்தி (24), சேத்தியாத்தோப்பு விழுப்பெரும்துரை ராமஜெயம் (32), காடாம்புலியூர் தாமரைக்கண்ணன் (56), விருத்தாசலம் செல்வராஜ் நகர் முத்துலட்சுமி (60), விருத்தாசலம் ராமசந்திரன்பேட்டை பூங்காவனம் (55) ஆகிய 9 பேரும் மயங்கி கீழே விழுந்தனர்.
அவர்கள் மீதும் அக்கம் பக்கத்தினர் தண்ணீர் தெளித்தும் தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்தனர். இதையடுத்து, 9 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் மேல்சிகிச்சைக்காக கருணாகரன்டேவிட் கடலூர் அரசு மருத்துவமனைக்கும், ராதாகிருஷ்ணன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். இறந்த கருணாகரன்டேவிட்டுக்கு மலர்கொடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ராதாகிருஷ்ணனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இதற்கிடையே விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் போலீஸ் விஜயசாந்தி உள்பட 7 பேரும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.
Next Story






